பக்கம் எண் :

(இ - ள்.) குற்றமொன்றும் ஆராயாது நாம் ஊட, விசாரித்து நம் கொழுநர் நீங்குதலின்றியே தலையளி பண்ணினும் விரும்பாயாய் வேறுபாடின்றி உறங்கேமெனச் சொல்லாநின்றாய்; தங்கும் இருளையுடைய மயக்கத்தைச் செய்யும் மாலைக்காலத்து மனமே, நிறையுடையை நீ எ-று.

(15)

321. உரைகேட்டு நயத்தல்

துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர்வரை நாட னுரைகேட்டு நயந்தன்று.

(இ - ள்.) துன்பத்தோடு தங்கிய சூழ்ந்த தொடியினையுடைய தோளி உயர்ந்த மலைநாடன்றன் வார்த்தையைக் கேட்டு விரும்பியது எ-று.

வ - று. ஆழ விடுமோ வலரொடு வைகினும்
தாழ்குர லேனற் றலைக்கொண்ட - நூழில்
விரையாற் கமழும் விறன்மலை நாடன்
உரையாற் றளிர்க்கு முயிர்.

துயரக்கடலுள்ளே அழுந்தவிடுமோ? பிறர் தூற்றும் பழியோடு தங்கினும் குளிர்ந்த கதிரையுடைய தினையிலே தலைமணந்த நூழிலென்னும் வல்லியினுடைய மணங்கமழும் வெற்றியான் அமைந்த வரை நாடன் வார்த்தையாலே தளிர்க்கும் என்னுயிர் எ-று.

உயிர் ஆழவிடுமோ. ஆல்: அசை.

(16)

322. பாடகச் சீறடி பணிந்தபின்இரங்கல்

கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு
1பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கின்று.

(இ - ள்.) குவடு நீண்டமலையினையுடையவன்குவித்த கையுடனே பாடகம் அணிந்த சிற்றடியிலே வணங்கியபின்பு நெஞ்சு நெகிழ்ந்தது எ-று.

வ - று. அணிவரு பூஞ்சிலம் பார்க்கு மடிமேல்
மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
நிற்கென்றி வாழியர் நீ.

(இ - ள்.) அழகுமிகும் பொலிந்த சிலம்பு ஆரவாரிக்கும் அடிமேலே அழகிய வரைபோன்ற அகலத்தையுடையவன் கலங்கி வணங்கவும் வலிமையுற்ற மனமே , வணங்காயாய் சிறியகாலை ஊடல்தீராதே நிற்பனென்று சொல்லாநின்றாய்; வாழ்வாயாக நீ எ-று.

வாழியரென்பது நகை.

(17)

323. பள்ளிமிசைத் தொடர்தல்

மாயிருங் கங்குன் மாமலை நாடனைப்
பாய னீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று.


1. பு.வெ. 303.