வ - று.1உளைத்தவர் கூறுமுரையெல்லா நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த பழங்க ளனைத்தாய்ப் படுகளி செய்யும் முழங்கும் புனலூரன் மூப்பு . (இ - ள்.) வெறுத்தவர் கூறும் வார்த்தையெல்லாம் அங்ஙனே நிற்க, தோன்றின எயிற்றினையுடைய பரத்தையர் பலர்க்கும் ஆக்கின பழந்தேறலையொத்து மிக்க களிப்பினைப்பண்ணும், ஒலிக்கும் நீரினையுடைய ஊரனது முதுமை எ-று. (14) 339. பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல உம்மி லரிவை யுரைமொழி யொழிய எம்மில் வலவனுந் தேரும் வருமெனப் பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று. (இ - ள்.) உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வார்த்தை நீங்க, எங்கள் அகத்திடத்துப் பாகனும்தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது எ-று. வ - று. மாணலங் கொள்ளு மகிழ்நன்றணக்குமேற் பேணலம் பெண்மை யொழிகென்பார் - காணக் கலவ மயிலன்ன காரிகையார் சேரி வலவ னெடுந்தேர் வரும். (இ - ள்.) 'மாட்சிமைப்பட்ட எமது அழகினைக் கைக்கொள்ளும் தலைவன் எம்மை விட்டு நீங்குவானாயின், விரும்பேம்; பெண்மைத் தன்மை எம்மிடத்து நீங்குக' என்று சொல்லும் இற்பரத்தையர் காணத் தோகை மயிலினையொத்த பரத்தையர்தம் சேரிக்கண் பாகனையுடைய உயரிய தேர் வாராநிற்கும் எ-று. பேணலம் பெண்மையொழிகென்பார்காண வரும் . (15) 340. பிறர்மனைத் துயின்றமை விறலிகூறல் மற்றவர் சேரியின் மைந்த னுறைந்தமை இற்றென விறலி யெடுத்துரைத் தன்று. (இ - ள்.) பரத்தையர் சேரியிடத்துத்தலைவன் தங்கினபடி இத்தன்மைத்தெனப் பாணிச்சி எடுத்துச் சொல்லியது எ-று. வ - று. தண்டா ரணியவாந் தையலார் சேரியுள் வண்டார் வயலூரன் வைகினமை - உண்டால் அறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன் சிறியேன் பெரிய சிறப்பு. (இ - ள்.) குளிர்ந்த மாலையினையுடைய அழகை ஆசைப்படும் பரத்தையர் சேரியிடத்திலே சுரும்பு நிறைந்த கழனியையுடைய ஊரன் தங்கினமை நீ அருளினபடியால் உண்டு; யான் அறியேன்; அடி பொருந்தும் ஆபரணத்தினையுடையாளாலே பெற்றேன், சிறிய யான் பெரிய நன்மையை எ-று . (16)
1. தொல். அகத். சூ. 54, இளம்.; சூ. 51, ந. மேற் . |