(இ - ள்.) தன் ஏவலைச் செய்யாத வீரர் கெட மாறுபாட்டைக் கடந்து தோட்டியையும் களிற்றையும் கைப்பற்றினான் குதிரைத் தொழிலைவல்லவன்; கச்சினையுடைய ஒள்ளிய வாள்வீரர் பணிந்து வாழ்த்த பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து ஏவல் எ - று. - எவை வல்லவென்றுமாம். (24) 119. வேற்றுப்படை வரவு மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப் பெய்தார் மார்பிற் பிறன்வர வுரைத்தன்று. (இ - ள்.) போர்மிகும் வேலோன் சூழ்தல்விட்டுப் போக இட்ட மாலைமார்பினையுடைய வேற்றுவேந்தன் வரவினைச் சொல்லியது எ - று. வ - று. உவனின் றுறுதுயர முய்யாமை நோக்கி அவனென் றுலகேத்து மாண்மை - இவனன்றி மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம் முற்றியார் முற்று விட. (இ - ள்.) உவன் இற்றைநாளிலே பொருந்தும் விதனத்தினின்றும் ஒழியாமையைப் பார்த்து அப்படிக் கொத்தவனென்று சொல்லி உயர்ந்தோர் புகழும் ஆண்மைத்தன்மையினையுடைய இவனல்லது மற்று யாவர் இது செய்யவல்லார்! மேகம் உறங்கும் நீண்ட மதிலைச் சூழப்போனார் வளைவு விட எ - று. (25) 120. உழுது வித்திடுதல் எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித் துண்ணா வரகொடு கொள்வித் தின்று. (இ - ள்.) பகைவருடைய பலஅரணும் கழுதையாகிய ஏரிட்டுழுது கவடியுடன் குடைவேலை விதைத்தது. எ - று. வ - று. எழுதெழின் மாடத் திடனெலா நூறிக் 1கழுதையேர் கையொளிர்வேல் கோலா-உழுததற்பின் வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற் கள்விரவு தாரான் கதம். (இ - ள்.) 2சித்திரமெழுதிய அழகிய மாளிகை முழுதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது அதற்குப் பின்பு கவடியும் குடைவேலும் வித்தினும் கெடாதால்; தேன் கலந்த மாலையினையுடையவன் கோபம் எ - று. (26) 121. வாண்மண்ணுநிலை புண்ணிய நீரிற் புரையோ ரேத்த மண்ணிய வாளின் மறங்கிளந் தன்று.
1. தொல், புறத் . சூ.13, ந; புறநா. 15:2-3, 392: 9-11: சிலப் 27: 55-6; காஞ்சிப் . நாடு. 28 2. "மாடக்குச் சித்திரமும்" (பழையசெய்யுள்.) |