9. பாடாண்படலம் | அமரர்கண் முடியு மறுவகை யாகிய கொடிநிலை கந்தழி வள்ளி குணஞ்சால் புலவரை யவர்வயிற் புகழ்ந்தாற்றுப் படுத்தல் புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர்ப் 3பணிதல் | 25 | நிகழ்ந்த காமப் பகுதியுட் டோன்றிய கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும் நற்றுனி நவின்ற பாடாண் பாட்டும் கடவுட் பக்கத்து மேனோர் பக்கத்தும் மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கமும் | 30 | மாதர் மகிழ்ந்த குழவியு மூரின் கண்ணே தோன்றிய காமப் பகுதியொ டாங்க வாறெண் பகுதிப் பொருளும் பாங்குற வுரைப்பது பாடாண் பாட்டே. |
என்-னின், பாடாண்பகுதியாமாறுஉணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பாடாண்பாட்டு முதலாகக் காமப்பகுதியீறாகச் சொல்லப் பட்ட நாற்பத்தெட்டும்பாடாண்டிணையும் துறைகளுமாம் எ-று. அவற்றுள்:- 189. பாடாண் பாட்டு 1ஒளியு மாற்றலு மோம்பாவீகையும் அளியு மென்றிவை யாய்ந்துரைத் தன்று. (இ - ள்.) இசையும் வலியும் சீர்தூக்காக் கொடையும்தண்ணளியும் என்று சொல்லுமிவற்றைத் தெரிந்து சொல்லியது எ-று. (வ - று.)2மன்னர் மடங்கன் மறையவர்சொன்மாலை அன்ன நடையினார்க் காரமுதம்- துன்னும் பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார் எரிசினவேற் றானையெங் கோ. (இ - ள்.) அரசர்பலர்க்கும் சிங்கம், அந்தணர்க்குப்புகழ்மாலை, அன்னம்போன்ற செலவினையுடைய மகளிர்க்குநிறைந்த அமிர்தம், செறியும் இரவலர்க்கு மழை,குளிர்ந்த பூவாற்செய்த செவ்விமாலையினையும்அழலும் சினவேற் சேனையினையுமுடைய எம்முடைய அரசன் எ-று. (1) 190. வாயினிலை புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை கரவின் றுரையெனக் காவலர்க் குரைத்தன்று. (இ - ள்.) அரசனுடைய நெடிய வாயிலைக் கிட்டிய என்வரவினை மறைவின்றிச் சொல்லென வாயில்காவலனுக்குச்சொல்லியது. எ-று.
1. ஒளி: குறள். 390, 556, 698; புறநா. 51, 309; சீவக. 248; மணி. 29:128. 2. நன் .சூ. 409, மயிலை. மேற். மாறன்.ப. 192, மேற். (பி-ம்)3. 'பரவல்' |