குற்றியலிகரமாகும். (உ-ம்.) நாகியாது, ஈறியாது, கூடியாது, தேசியாது, ஐதியாது, கோடியாது, கௌடியாது என நெடிற்றொடர் மொழிக்குற்றிய லிகரமேழும், எஃகியாது என ஆய்தத்தொடர்மொழிக் குற்றிய லிகரமொன்றும், வரகியாது, பலாசியாது, குழலினிதியாழினிது, பாவீறியாது, உருபியாது, அரூபியாது, வானேறியாது, ஒரைதியாது, செங்கோடியாது என உயிர்த்தொடர்மொழிக் குற்றியலிகரம் பதினொன்றும், கொக்கியாது, கச்சியாது, பட்டியாது, முத்தியாது, செப்பியாது, பற்றியாது என வன்றொடர்மொழிக் குற்றிய லிகரமாறும், சங்கியாது, மஞ்சியாது, துண்டியாது, பந்தியாது, அம்பியாது, கன்றியாது என மென்றொடர் மொழிக்குற்றிய லிகரமாறும், நொய்தியாது, சார்பியாது, சால்பியாது, மாழ்கியாது, தெள்கியாது என இடைத்தொடர் மொழிக்குற்றிய லிகரமைந்தும், கேண்மியா, சென்மியா என மியா வெனுமசைச் சொல்லி னிகரமொன்றும், ஆகமுப்பத்தேழும் வந்தன. - சூத்திரம். "வல்லெழுத்தாறோ டெழுவகையிடத்து, முகரமரையாம் யகரமோடியைபி, னிகரங்குறுகும் என்மனார் புலவர்." எ-து. குற்றியலுகரந் திரிந்த இகரமாறும், மியாவென்னு மசைச்சொல்லி னிகரமொன்றும், ஆகக்குற்றியலிகரம் ஏழேயாயினும், இடமும் பற்றுக்கோடுஞ்சார்ந்து முப்பத்தேழாயின. இகரந் தன்மாத்திரையிற் குறுகி ஒலித்தலின் காரணத்தால் முதலெழுத்தி னொலிவடிவின் வேறாய்க் குற்றியலிகரமெனப் பெயராய்ச் சார்பெழுத்தினொன்றாயின. - நன்னூல். "யகரம்வரக் குறளுத்திரி யிகரமு, மசைச்சொன்மியாவி னிகரமுங் குறிய." எ-து. மேற்கோள் எ-று. (11) | | | 15. | தனிக்குறிலல்லவற் றிறுதிவன்மை யூர்ந்துளிக்குறுகு முகரமென்ப தொடருயிருக்குறடுடைத் துணும்யவ்வரின் உ, இ யாஞ்சில முற்றுகரமு மற்றே. | | | (இ-ள்.) குற்றியலுகரமாமாறுணர்த்துதும், தனிநெடிலேழும், ஆய்த மொன்றும், மொழியிடையிறுதிகளில் வரப்பெறாத ஒளகாரமொழித் தொ ழிந்த உயிர்பதினொன்றும், வல்லெழுத்தாறும், மெல்லெழுத்தாறும், வல்லெழுத்துக்களோடு தொடராத வகரமொழித் தொழிந்த இடையெழுத்தைந்தும், ஆகிய முப்பத்தாறெழுத்தினுள் யாதானுமொன்று ஈற்றுக்கயலெழுத்தாய்த் தொடரப்பட்டு மொழியிறுதிக்கண் வல்லெழுத்துக்களுள் யாதானுமொன்று பற்றுக்கோடாக அதனை யூர்ந்து வருமுகரந் தன்மாத்திரையிற் குறுகும்; அது குற்றியலுகரமாம். (உ-ம்) நாகு-ஈறு-கூடு-தேசு-ஐது கோடு-கௌடு என நெடிற்றொடர் மொழிக் குற்றுகர மேழும், எஃகு என ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர மொன்றும், வரகு-பலாசு-பரிசு-பாவீறு உருபு-அருபு-வானேறு-ஒரைது என உயிர்த்தொடர் மொழிக்குற்றுகரம் பதினொன்றும், |
|
|