105காரணம்
யாவதுந் துன்பமன்னா யாக்கை கொண்டவர்கட் கென்றான்." இதனுளாதிக் கடவுளன்றி
மற்றைத் தேவர்படுந்துன்பங்களைச் சொன்னபின் னத்தேவரு முடலுடையாராகி யடையுந்
துன்பங்காட்டப் பொதுப்பட்ட வுடலைக் கொண்டயாவர்க்கு மெல்லாந் துன்பந்தானே
யென்றுமுடித்தானாகையிற் பொதுவகத்திணை யாயிற்று. மீளவுங் காம மயக்கத்தைக்
காட்டப் பொதுப்படக் காதன்மிகுதியால்வரு மதிமயக்கங்காட்டி காதன் மிக்குழி
கற்றனவுங் கைகொடாவாதல் கண்ணகத் தஞ்சனம்போலுமால், என்பது சிந்தாமணி.
இதுவும் பொது வகத்திணையாம். எ-று. (5)
 

155.

உவமை யெனப்பிறி தொப்ப வுரைத்தலே.
 
     (இ-ள்.) உவமையகத்திணையா மாறுணர்த்துதும். தானேயுரைப்பா னெடுத்த
பொருளை விளக்கவு மற்றவ ரவற்றை யொப்பித்துக் கொள்ளவும் பிறிதொன்றனை
யெடுத்திரண்டிற் கொப்புமை காட்டித் தன்பொருடோன்ற விளக்கியுரைப்ப
துவமையகத்திணை யெனப்படு மாகையில் விளக்குவ மையென்று
மொப்பித்துக்காட்டுவமையென்று மிவை யிருவகைப்படும். இவற்று ளத்தாட்சியு
மடங்குமென்றுணர்க. (உ-ம்.) குறள். - "சலத்தாற் பொருள்செய்தே மாத்தல் பசுமட்,
கலத்துணீர் பெய்திரீஇயற்று." எ-து. விளக்குவமை. "வாளோடென் வன்கண்ண
ரல்லார்க்கு நூலோடென், னுண் ணவை யஞ்சுபவர்க்கு.' எ-து. ஒப்பித்துக்காட்டுவமை. -
சிந்தாமணி. - காமத்தாற் கேடுவருமெனச் சச்சந்தற்கு மந்திரி காட்டிச் சொன்னதாவது:-
"காமமே கன்றி நின்ற கழுதை கண்டரு ளினாலே, வாமனார் சென்று கூடி வருந்திநீ
ரென்னும் வையத், தீமஞ்சேர் மாலை போல விழித்திடப் பட்ட தன்றே, நாமவேற்
றடக்கை வேந்தே நாமிது தெரியி னென்றான்." அன்றியுங் கணவனை யிழந்ததற்
குள்ளத் தேற வுலகினிலைத்த செல்வமில்லையென் றத் தாட்சியாகவும் பொதுப்
பொருளாகவும் காட்டினபடியாவது. - சிந்தாமணி. - "மன்னுநீர் மொக்கு ளொக்கு
மானிட ரிளைமை யின்ப, மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு,
மின்னிசை யிரங்க நல்யா ழினியினு மினிய சொல்லா, யன்ன தால்வினை யினாக்க
மழங்குப தென்னை யென்றான்" இதனுட்பொருட்குப் பொருள்விளக்குவமைகொண்டு
தன்பொ ருளத்தாட்சியா லொப்பித்த வுவமையுரைத்தவாறு காண்க. ஈண்டினி யணி
யதிகாரத்துவமையு முவமைவிகற்பங்களும் விரித்துரைப்பாம். எ-று. (6)
 

156.

புறநிலை யொப்பிழி வாக்கமென மூன்றே.
 
     (இ-ள்.) புறநிலை யகத்திணையா மாறுணர்த்துதும். தான் குறித்தவற்றிற் புறத்து
மற்றொரு பொருளை யெடுத்துக் காட்டிக் குறித்த தன் பொருளை விளக்குதல்,
புறநிலையகத் திணையெனப்படும். இதுவே ஒப்பு மிழிவு மாக்க முமென மூவகைத்தெனக்
கொள்க. இவற்றுட் புறத்தெடுத்த பொருட்குத் தன் பொருளொத்ததெனி லொப்பு;
குறைந்ததெனி லிழிவு; மிக்கதெனிலாக்கமெனப்படும்.