இது குறிப்புக்காரண வகத்திணை; இந்நால்வகைக் காரணங்களால் வருங் காரியங்களைக் கொண்டிவ்வாறு தத்தங் காரணப் பொருட்களை விளக்கி யுரைப்பது காரியவகத்திணையாம். - குறள். - "நோயெல்லா நோய்செய்தார் மேலவாநோய் செய்யார், நோயின்மை வேண்டு பவர்." பிறர்க்கு நோய் செய்தற் காரணமாகத் தனக்கு நோய் காரியமாக விளையு மென்றமையாற் பிறர்க்கு நோய் செய்வ தின்னாதெனக் காட்டின காரியவகத்திணை யாயிற்று. பிறவுமன்ன. எ-று. (9) |
159. | காரக மென்ப கருத்தா கருமங் கருவி கருத்திடங் காலந் திறனேழே. | |
(இ-ள்.) காரகவகத்திணையாமாறுணர்த்துதும். ஒன்றனைச் செய்தலிற் கூடியபலவும் பொதுப்பெயராகக் காரகமெனப்படும். அவையே செய்பவனுஞ் செய்தொழிலு மதற்குதவு மிருவகைக் கருவிகளு மதனாற்கருதி பயனு மதனைமுடித்தவிடமுங் காலமும் படியுமெனக் காரக மெழுவகைப்படும். ஆகையிலொன்றனைவிளக்க விவற்றைவிரித்துக் காட்டில் காரகவ கத்திணையா மெனக்கொள்க. இவற்றுளெல்லா நடப்பினுஞ் சிலவொழித்துச் சில நடப்பினுமாம். (உ-ம்.) தேம்பாவணி. - "தண்டவத் தனைய பைம்பூந் தருத்திர ணிழற்றிக் கவ்வு, மண்டபத் தொருநாள் வைகி மதுநலம் பொழிவாய்க் கஞ்சம், விண்டவத் தொழியு மாந்தர் வீடுறச் செப்பங் காட்டி, யொண்டவத் திறைவன் சூசை யுரைவிரி தமிழிற் சொன்னான்." இதிலே யொண்டவத்திறைவன் சூசையென்பது கருத்தா; செப்பங்காட்டிச் சொன்னா னென்பது கருமம்; மதுநலம் பொழிவாய்க் கஞ்சம்விண்டென்பது கருவி; அவத்தொழியு மாந்தர் வீடுறவென்பது கருத்து; தண்டவ மண்டபத் தென்பதிடம்; ஒரு நாளென்பது காலம்; உரைவிரி தமிழி லென்பது திறன்; என வேழும் வந்தவாறு காண்க. ஈண்டுச் சுருங்கச் சொன்னதை விரித்துரைப்பவு மியல்பே. எ-று. (10) |
160. | முன்னவை பின்னவை முன்பின் னடந்தன பன்னித் தன்பொருள் பயன்படப் பகர்தலே. | |
(இ-ள்.) முன்னவையகத்திணையும் பின்னவையகத்திணையுமா மாறுணர்த்துதும். எடுத்தபொருளே தோன்றவதற்கு முன்னாயதும் பின்னாவதும் விரித்துக்காட்டல் முன்னவை பின்னவையென விருவகை யகத்திணையாம். (உ-ம்.) விருத்தம். - "காலைவாய் மலர்க்கமலங் காய்ந்திதட் கதவடைப்பச், சோலைவாய்ப் பறைதுவைத்த புள்களிப்ப வெங்கதிரோன், வேலைவாயுறமேவிய கறவைகள் கரையா, மாலைவா யிருள்வடி வொடுகங்குல் வந்ததுவே." புறநிலை. இதிலே யிராவைவிளக்குவதற்கு முன்வரும் பலவற்றை விரித்துரைத்தமையான் முன்னவை யகத்திணை யாயிற்று. - குறள் - "பகைபாவ மச்சம் பழியென நான்கு, மிகவாவா மில்லிறப்பான் கண்." இதிலே |