107காரணம்
இது குறிப்புக்காரண வகத்திணை; இந்நால்வகைக் காரணங்களால் வருங் காரியங்களைக்
கொண்டிவ்வாறு தத்தங் காரணப் பொருட்களை விளக்கி யுரைப்பது
காரியவகத்திணையாம். - குறள். - "நோயெல்லா நோய்செய்தார் மேலவாநோய்
செய்யார், நோயின்மை வேண்டு பவர்." பிறர்க்கு நோய் செய்தற் காரணமாகத் தனக்கு
நோய் காரியமாக விளையு மென்றமையாற் பிறர்க்கு நோய் செய்வ தின்னாதெனக்
காட்டின காரியவகத்திணை யாயிற்று. பிறவுமன்ன. எ-று. (9)
 

159.

காரக மென்ப கருத்தா கருமங்
கருவி கருத்திடங் காலந் திறனேழே.
 
     (இ-ள்.) காரகவகத்திணையாமாறுணர்த்துதும். ஒன்றனைச் செய்தலிற் கூடியபலவும்
பொதுப்பெயராகக் காரகமெனப்படும். அவையே செய்பவனுஞ் செய்தொழிலு மதற்குதவு
மிருவகைக் கருவிகளு மதனாற்கருதி பயனு மதனைமுடித்தவிடமுங் காலமும்
படியுமெனக் காரக மெழுவகைப்படும். ஆகையிலொன்றனைவிளக்க விவற்றைவிரித்துக்
காட்டில் காரகவ கத்திணையா மெனக்கொள்க. இவற்றுளெல்லா நடப்பினுஞ்
சிலவொழித்துச் சில நடப்பினுமாம். (உ-ம்.) தேம்பாவணி. - "தண்டவத் தனைய
பைம்பூந் தருத்திர ணிழற்றிக் கவ்வு, மண்டபத் தொருநாள் வைகி மதுநலம் பொழிவாய்க்
கஞ்சம், விண்டவத் தொழியு மாந்தர் வீடுறச் செப்பங் காட்டி, யொண்டவத் திறைவன்
சூசை யுரைவிரி தமிழிற் சொன்னான்." இதிலே யொண்டவத்திறைவன் சூசையென்பது
கருத்தா; செப்பங்காட்டிச் சொன்னா னென்பது கருமம்; மதுநலம் பொழிவாய்க்
கஞ்சம்விண்டென்பது கருவி; அவத்தொழியு மாந்தர் வீடுறவென்பது கருத்து; தண்டவ
மண்டபத் தென்பதிடம்; ஒரு நாளென்பது காலம்; உரைவிரி தமிழி லென்பது திறன்;
என வேழும் வந்தவாறு காண்க. ஈண்டுச் சுருங்கச் சொன்னதை விரித்துரைப்பவு
மியல்பே. எ-று. (10)
 

160.

முன்னவை பின்னவை முன்பின் னடந்தன
பன்னித் தன்பொருள் பயன்படப் பகர்தலே.
 
     (இ-ள்.) முன்னவையகத்திணையும் பின்னவையகத்திணையுமா மாறுணர்த்துதும்.
எடுத்தபொருளே தோன்றவதற்கு முன்னாயதும் பின்னாவதும் விரித்துக்காட்டல்
முன்னவை பின்னவையென விருவகை யகத்திணையாம். (உ-ம்.) விருத்தம். -
"காலைவாய் மலர்க்கமலங் காய்ந்திதட் கதவடைப்பச், சோலைவாய்ப் பறைதுவைத்த
புள்களிப்ப வெங்கதிரோன், வேலைவாயுறமேவிய கறவைகள் கரையா, மாலைவா
யிருள்வடி வொடுகங்குல் வந்ததுவே." புறநிலை. இதிலே யிராவைவிளக்குவதற்கு
முன்வரும் பலவற்றை விரித்துரைத்தமையான் முன்னவை யகத்திணை யாயிற்று. - குறள்
- "பகைபாவ மச்சம் பழியென நான்கு, மிகவாவா மில்லிறப்பான் கண்." இதிலே