108தொன்னூல்விளக்கம்
பிறமனை விரும்பலாகா தென்பது காட்ட விரும்பினபின்னர், வரும் பகைபாவ
மச்சம்பழியென நாற்கேடுகளைக் காட்டினவதனாற் பின்னவை யகத்திணையாயிற்று. -
தேம்பாவணி. - "தொல்வினை யினிய வென்று துகளுறத் தோன்றுங் காலு, நல்வினை
யரிய வென்று நடங்கெடத் தொன்றுங் காலுங், கொல்வினை நிரையச் செந்தீக்
குளிப்பநல் லுணர்விற் றாழ்ந்து, வல்வினை யூக்கம் பூண்டு மருளலென் னெஞ்சே
யென்றான்." இதிலே யருமைக்கஞ்சி நல்வினைவிடாமலு மினிமைவிரும்பித் தீவினை
செய்யாமலு முறுதிபெறும்படித் தீவினை பின்வரு நரகத் பீடைகளுணர்வது
நன்றென்றமையா லிதுவும் பின்னவை யகத்திணை யாயிற்று. இவ்வகத்திணையை 199-ம்
சூத்திரத்தில் விரித்துக் கூறுதும். (11)
 

161.

புறத்திணை யொழுக்கநூல் புறக்கரி மூன்றே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே புறத்திணையாமாறுணர்த்துதும். அவையே ஒழுக்கமு
நூலுங் கரியுமென மூவகைப்படும். இவற்றுளவ்வவநாட்டி னிறைவழுவின்றி
யொழுகுமுறையே ஒழுக்க மெனப்படும். இவ்வகைமுறையோடு தன்பொருளொத்ததாகக்
காட்ட லொழுக்கப்புறத் திணையாம். (உ-ம்.) குறள். - "எவ்வ துறைவ துலக
முலகத்தோ, டவ்வ துறைவ தறிவு." என்றாராகையிலுலகுள வழுவற்றமுறையோ
டொத்ததிதுவெனக் காட்டி னுலகங்கொள்ளத் தகுவதென்பது விளங்கும். அன்றியும்,
வேதநூல் நீதி நூல் மனுநூல் முதலிய நூல்வழி விலக்கினவும் விதித்தனவு மெடுத்துக்
காட்டித் தன்பொருடோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம். மறுப்பாரின் றிவழங்கு
நூலினிடத்துத் தானெடுத்துரைத்த பொருளே யுளவெனக்கா ட்டினெவருமையமின்றி
யொப்பித்துக் கொள்வதெளிதே. அன்றியுங் கரியெனினுங் சாட்சியெனினுமொக்கும்.
ஆகையின்மிக் கறிவுடையோருரைத்ததாயினு மெழுதினதாயினுந் தானெடுத்தபொருட்குச்
சாட்சியாகக்கொண்டு காட்டல் கரிப்புறத்திணையாம். ஆகையிலிலக்கிய வுதாரணங்களை
யெடுத்துக்காட்ட லிப்புறத்திணையாமெனக் கொள்க. இப்புறத்திணையை 199-ம்
சூத்திரத்தில் மேற்கோளாக விரித்துக்கூறுதும். எ-று. (12)
 

மூன்றாவது:- விரிவு.
3. Detail.
 

162.

விரிவென வணிவழி விரித்த தன்பொரு
டெரியவைக் கட்செலச் செப்புத லென்ப.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே விரிவாமாறுணர்த்துதும். விரிவெனி னும்
பரவெனினுமொக்கு மாகையின் மேற்கூறிய திணைமூவைந்து மெல்
லாப்பொருட்கெல்லாம் வேண்டியவல்லவாகி யொருபொருட்குரிய சிலவுஞ்