187செய்யுளியல்
சாமி - புவியிலிரு ளாவேம மூரலுண் ணாமாடு பொங்கிவே காதகாணம் - பூண் டொடி
படாவத்த மறுபடா வுடலெழு பொதிதந்து நீவாழியே." இது பன்னிருசீர் இரட்டை
யாசிரிய விருத்தம். எ-று. (30)
 
249. சந்த விருத்தந் தம்முளொத் தெழுத்தசை
வந்தொலி பற்றி வருமுள பிறவே.
 
     (இ-ள்.) சந்த விருத்த முணர்த்துதும். மேற்கூறிய விருத்த வகையு மன்றிச் சந்த
விருத்த மென்றும் வண்ண விருத்த மென்று மற் றொருவகை விருத்த மென்று முளவாம்.
இவையே சீரெண்ணாமலுங் குறிப்புச் சந்தம் பற்றி யெழுத்து வகையானு மசை
வகையானும் வேறுபட வரு மாதலா லெழுத்துச் சந்த விருத்தமும் அசைச் சந்த
விருத்தமு மென விருவகைப் படும். ஆகையி லிவற்றுட் சில விருத்த மெழுத்து
மாத்திரையாயினு மொற்றாகவரு மெழுத்தின மாயினு மாறின தன்மையே சந்த வோசையு
மாறும். சில விருத்த மெழுத்து மாறினு மசை மாறா தாயி னோசையு மாறாதெனக்
கொள்க. (வ-று.) தேம்பாவணி. - "அழலெழ வளைத்தசாப விருமுகி லளவில் பனித்த
பாண மழையோடு, நிழலெழ மறைத்த வானம் வெருவுற நிரைநிரை யெதிர்த்த தானை
முரி தரப், புழலெழ வுரைத்த வாளி வழிவழி புனலென விரத்த மோட விரு வருஞ்,
சுழலெழ வுருத்த வாரி யெனவமர் தொடுமுறை யுரைப்ப நூலி னளவதோ." - என
விதிலே நெடிலுங் குறிலு மொற்றினினமு மாறா தெழுத்து வகையாற் சந்த விருத்தம்
வந்தவாறு காண்க. - தேம்பாவணி - "வரையீர் புனலே மழையீர் வரையே, விரையீ
ரமரா விரிபூந் தடமே, சுரையீர் மலரத் தொடைசூழ் பொழிலே, யுரையீ ருயிரின்
னுயிருள் வழியே." - என விதிலே நெடில்குறி லொற்றின மாறியு நிரை நேரினு
மசைமாறா தசைவகையாற் சந்த விருத்தம் வந்தவாறு காண்க. அன்றியுஞ் சில விருத்த
மிவ்வகை யொப்புமை யெல்லாச் சீரினும் வேண்டா தொரோ விடத்து மாத்திரம்
வேண்டுவ துளவெனக் கொள்க. (வ-று.) தேம்பாவணி. - "தொல்லை யிம்மருளி னூழ்த்த
துகள்விடத் துணித லொன்றா, வொல்லையிந் நசைநீங்காதே லூழ்வில வேத லொன்றா,
வெல்லையிவ் விரண்டி லொன்றே யாவருந் தவிரா தென்ன, வல்லையிவ் வுணர்விற்
றேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய்." என விதிலே மற்றச்சீர் தம்முண் மேற்
சொன்ன வினத்தைப் பற்றி மாறிவரினு மூன்றாஞ் சீராகவு மாறாஞ்சீராகவு மடிதோறும்
வருந் தேமா - மாறி புளிமா வரி னோசை குன்று மென்றமையா லொரோ விடத்தசை
யொப்புமைப் பற்றி வந்த விருத்த மெனக் கொள்க. அன்றியுஞ் சூத்திரத்துள் பிற
வென்றமையாற் சிந்தாமணியுள் ளெழுத்து மசையுஞ் சீருமென்றிவை தம்மு ளொப்புமை
யின்றிவரும் விருத்த முளவே. ஆயினும் வெண்டளை சிதையாவரு மாகையின்
வெண்பாவிற் கேற்ற செப்ப லோசை பெறுமெனக் கொள்க.