115உரிமை. - காலவுரிமை
வலம்புரி தவத்தினா மவ்வலையுறா விலகல் வேண்டுங், கலம்புரி பைம்பூ மூழ்கிக்
கதிர்த்த பெரற்குன்றின் மார்போய்." - "கச்சொன் றிட்டுணர் வொடுக்கங் கட்டிமெய்ச்
சகட்டை யோட்டி, நச்சொன் றிரட்டே தச்சேற் றுண்ணல் லுயிரச் சிற்றான்மற், றச்சொன்
றிட்டூர் தறேற்றா தழும்பலர் கண்டீர் நல்லோர், மெய்ச்சொன் றிரட்டச் சிறாமுன் வீடுற
வூர்மின் பாகீர்." என்பன பலவுந் தொகையுந் துணிவும் வந்தவாறு காண்க. எ-று. (2)
 

ஐந்தாவது :- உரிமை.
5. Characteristics.
 

165.

எப்பொரு ளெவ்வழி யியம்பினு மதற்கதற்
குரிய வுரைப்ப துரிமையாங் கால
மிடம் பண்பொழுக்கிறை யெனவைங் கூற்றே.
 
     (இ-ள்.) உரிமையு முரிமைவிகற்பமுமா மாறுணர்த்துதும். மேற்கூறி
யபதிகமுதலெவ்வழிக்கண்ணு மெவ்வகை விழுமியபொருளை யுரைப்பினு
மவற்றவற்றுரிமை வழுவாதுரைப்பது முறையெனக்கொள்க. ஆகையிற் காலமு மிடமுங்
குணமு முலகினொழுக்கமுஞ் சொல்லு மெனவைந்திணை யும்பற்றி
வருமுரிமையைவகைப்படு மெனக்கொள்க. இவற்றைத் தனித் தனி விளக்குதும். எ-று.
 

காலவுரிமை.
Time.
 

166.

காலமே பருவம் பொழுதென விரண்டாய்ப்
பருவங் கார்கூதிர் பனிமுன்பின் வசந்த
மெரிமுதிர் வேனி லென்றிரு மூன்றே.
 
     (இ-ள்.) காலவுரிமையாமா றுணர்த்துதும். பருவமும் பொழுதுமெ
னக்காலமிருவகைத்தே. அவற்றைப் பெரும்பொழு தெனவுஞ் சிறுபொழு தெனவுங்
குறிப்பாரெனக்கொள்க. அவற்றுட் பருவமறுவகைப்படும். அவையே கார்ப்பருவம்,
கூதிர்ப்பருவம், முன்பனிப்பருவம், பின்பனிப்பருவம், இளைவேனிற்பருவம்,
முதிர்வேனிற்பருவம், எனவாறென்ப. அவையே யாவணி முதலொவ்வொன்றிற் கிருமதி
யெல்லையாக வருமெனக்கொள்க. அவற்றுளிளைவேனிலெனினும்
வசந்தமெனினுமொக்கும். ஆகையிலவ்வப் பருவத்துரிமையை யினிக்காட்டுவதும். -
இலக்கண விளக்கம். - "காரேகூதிர்முன்பனி பின்பனி, சீரிளைவேனின் முதுவேனி
லென்றாங், கிரு மூன்று திறத்ததுபெரும்பொழுதவைதா, மாவணிமுதலா விரண்டிரண்டாக,
வாடியிறுதிய வாயுங்காலே." - அகப்பொருள் விளக்கம். - "காரேகூதிர்