117காலவுரீமை
     (இ-ள்.) முன்பனிப் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். கொண்டற் காற்று வீசலும்,
தூக்கணங் குருவியுங் கூகையு மாந்தையுமென விவைமகிழ்தலும், மாவுஞ் சிவந்தியு
மலர்தலும், இலந்தைப் பழுத்தலும், குன்றிக் காய்த்தலும், செந்நெல் விளைதலும்,
கரும்புமுதிர்தலும், முன்பனிப் பருவத் துரிமை யெனப்படும். எ-று. (4)
 

170.

பின்பனிக் குரிமை பேசுங் காலை
யுலவை வீசலே யுளபல புறவினம்
வலிது கூய்க்கான வாரணங் களித்தலே
கோங்கில வலர்தலே குரவ நெடும்பனை
தீங்கனி யுதவலே சிதப்பரி வெடித்தலே.
 
     (இ-ள்.) பின்பனிப் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். உலவைக்காற்று வீசலும்,
பலபுறவினமுங் கானக்கோழியு மெனவிவை மகிழ்தலும், கோங்குமிலவும்பூத்தலும்,
பேரீந்துபனையென்றிவையேபழுத்தலும், பருத்திவெண்சுளை வெடித்தலும்,
பின்பனிப்பருவத்துரிமை யெனப்படும். எ-று. (5)
 

171.

வசந்தத் துரிமை வசந்தற் றேரெனுந்
தென்றலே வண்டினஞ் சிறுகிளி பூவை
யன்றிலே குயிலிவை யகமகிழ்ந் தார்த்தலே
மாங்கனி யுதிர்தலே தேங்கய மலரொடு
வகுளந் தாழை வழைசெண் பகம்பிற
முகிழினி தவிழ்த்தலே முன்கா ரிடைக்களி
மிகுவன் மயின்முதன் மெலிதலே யென்ப.
 
     (இ-ள்.) இளைவேனிற் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். மன்மதன்றோராகிய
தென்றல்வீசலும், பலவண்டினமுங் கிளியும் பூவையு மன்றிலுங் குயிலு மென விவை
மகிழ்தலும், மாங்கனி யுதிர்தலும், நீர்மலரன்றி மகிழ் தாழை புன்னை செண்பகம் பலவு
மலர்தலும், கார்ப்பருவத்து மகிழ்ந்தகோபங் கேகயப்புண் மயிலிவையே மெலிதலும்.
இளைவேனிற் பருவத்துரிமை யெனப்படும். எ-று. (6)
 

172.

வேனிற் குரிமை கானிற் றூசெழக்
கோடையே வீசக் குறுகப் பேய்த்தேர்
காடையே வலியான் கம்புள் காகஞ்
சிரவ மொலித்தல் புருண்டி சிந்துரம்
பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு
கோடர நாவல் குலிகங் காய்த்த
னீரலகன் மற்றுயிர் சீரலகிச் சோரலே.