(இ-ள்.) முன்பனிப் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். கொண்டற் காற்று வீசலும், தூக்கணங் குருவியுங் கூகையு மாந்தையுமென விவைமகிழ்தலும், மாவுஞ் சிவந்தியு மலர்தலும், இலந்தைப் பழுத்தலும், குன்றிக் காய்த்தலும், செந்நெல் விளைதலும், கரும்புமுதிர்தலும், முன்பனிப் பருவத் துரிமை யெனப்படும். எ-று. (4) |
170. | பின்பனிக் குரிமை பேசுங் காலை யுலவை வீசலே யுளபல புறவினம் வலிது கூய்க்கான வாரணங் களித்தலே கோங்கில வலர்தலே குரவ நெடும்பனை தீங்கனி யுதவலே சிதப்பரி வெடித்தலே. | |
(இ-ள்.) பின்பனிப் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். உலவைக்காற்று வீசலும், பலபுறவினமுங் கானக்கோழியு மெனவிவை மகிழ்தலும், கோங்குமிலவும்பூத்தலும், பேரீந்துபனையென்றிவையேபழுத்தலும், பருத்திவெண்சுளை வெடித்தலும், பின்பனிப்பருவத்துரிமை யெனப்படும். எ-று. (5) |
171. | வசந்தத் துரிமை வசந்தற் றேரெனுந் தென்றலே வண்டினஞ் சிறுகிளி பூவை யன்றிலே குயிலிவை யகமகிழ்ந் தார்த்தலே மாங்கனி யுதிர்தலே தேங்கய மலரொடு வகுளந் தாழை வழைசெண் பகம்பிற முகிழினி தவிழ்த்தலே முன்கா ரிடைக்களி மிகுவன் மயின்முதன் மெலிதலே யென்ப. | |
(இ-ள்.) இளைவேனிற் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். மன்மதன்றோராகிய தென்றல்வீசலும், பலவண்டினமுங் கிளியும் பூவையு மன்றிலுங் குயிலு மென விவை மகிழ்தலும், மாங்கனி யுதிர்தலும், நீர்மலரன்றி மகிழ் தாழை புன்னை செண்பகம் பலவு மலர்தலும், கார்ப்பருவத்து மகிழ்ந்தகோபங் கேகயப்புண் மயிலிவையே மெலிதலும். இளைவேனிற் பருவத்துரிமை யெனப்படும். எ-று. (6) |
172. | வேனிற் குரிமை கானிற் றூசெழக் கோடையே வீசக் குறுகப் பேய்த்தேர் காடையே வலியான் கம்புள் காகஞ் சிரவ மொலித்தல் புருண்டி சிந்துரம் பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு கோடர நாவல் குலிகங் காய்த்த னீரலகன் மற்றுயிர் சீரலகிச் சோரலே. | |