118தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) முதிர்வேனிற் பருவத்துரிமையா மாறுணர்த்துதும். எங்குந் தூசெழும்படி
கோடைக்காற்றுவீசலும், கானற்றோன்றலும், காடையும்வ லியானும் வானம்பாடியுங்
காகமுங் கவுதாரியுமென விவைமகிழ்தலும், மல்லிகை புளி பாதிரி யென்றிவை பூத்தலும்,
பாலை காஞ்சிரம் நாவ லிலுப்பை யென்றிவைக்காய்த்தலும், நீரேகுறுகலும், ஈண்டுக்கூறிய
வுயிரேயன்றி மற்றெலாங்குழைந்து சோரலும், பூவுலகழகு குன்றவருமுதிர்வேனிற்
பருவத்துரிமையெனப்படும். ஆகையி லவ்வவப் பருவத்திம் முறைவழுவாது காத்தல்
பருவத்துரிமையெனப்படும். இவ்வாறன்றி யொன்றற்குரியன பிறிதொன்றற்குரைப்பது
பருவமலைவாம். (உ-ம்.) வெண்பா. - "வரைவாய் கனித்து மயிலகவத் தாழை, கரைவாய்
முகைத்துக் கமழ - விரைவாய்த், தளவேமு கைநெகிழத் தண்கொன்றை பூப்ப,
விளைவேனில் வந்துலவிற் றின்று." இதனின்மயில்களித்தகவலு முல்லைகொன்றை
யென்றிவைபூத்தலுங் கார்ப்ப ருவத்திற்குரியனவாகி யிளைவேனிற்பருவத் துரியனவாத்
தோன்றப்புணர் த்தமையாற் பருவமலைவாயிற்று. பிறவுமன்ன.
ஆயினுமடுத்தபருவத்துரியன வொன்றிரண்டொரோவிடத்து விரவி மயங்கினும்
வழுவன்றெனக்கண் டுணர்க. அங்ஙனம் கம்பர் கிஷிகிந்தாகாண்டக் கார்காலப்
படலத்துக்கார் கூதிரென் றிருபருவத்துக்குரியன சிலவற்றை மயங்கவைத்தவாறு காண்க.
நைடதத்தோவெனி லிளைவேனிற் படலத்திற் சொன்னதாவது:- விருத்தம். - "கள்ளுயர்த்
தலரு முல்லைக் கடிமுகை முறுவ றோன்ற, வள்ளிதழ்க் குவளை யுண்கண் மலர்ந்து
மாந்தளிர்மென் கையாற், கிள்ளை மென்குதலை சாற்றிக் கிளரொளி வண்டு பாணாற்,
றெள்விளிப் பாட வேனிற் றிருமகள் சிறந்த தன்றே." மீளவும், "அரவ மேகலை
யாயிழை யார்க்குயர், குரவம் பாவை கொடுத்த கொழுதிமென், முருகுலாமளி மொய்த்த
கடம்பினம், பரிவி னாடவெண் பந்து கொடுத்தவே." என்பனவற்றுள்ளே முல்லையுங்
கடம்புங் கார்ப்பருவத்துரிய மலராகையி லிளைவேனிற் பருவத்தலர்ந்தனவாகக்
கூறியமையாற் பருவமலைவாயிற்றென்மனார் புலவர். ஆகையிலிவ்வகை வழுவாராமற்
காத்தலறிவோர் கடனெனக்கொள்க. எ-று. (7)
 

173.

பொழுதென மாலைக் கெழுயாமம் வைகறை
யெற்றோற்ற நண்பக லெற்பா டெனவாறே
மாலைக் குரிமை மலர்த லுற்ப லம்புள்
சோலைசேர்ந் தொலித்தல் சுரபி கரைத
றுன்னடைத் தாமரை சுளித்தெனக் கூம்பல்
கன்னடங் காம்போதி கனியப் பாடலே
யாமத் துரிமை யாகரி பாடலே
யூமன் சகோர முவரி யுவத்தலே
காம மநினதங் கரவென் றிவையே