பொழுதிற் குரியவை தோன்ற முறைவிடா துரைப்பது பொழு தெனுங் காலவுரி மையாம். இவ்வாறன்றி யொன்றற்குரிய பிறிதொன்றிற் றோன்றக்கூறல் பொழுது மலைவாம். - வெண்பா. - "செங்கமலம் வாய்குவியத் தேங்குமு தங்கண்மலர, வெங்குநெடு வான்மீ னினிதிமைப்பப் - பொங்குதையத், தோராழித்தேரோனெழிலாலு வந்ததே, நீராழி சூழ்ந்த நிலம்." இதிற்றாமரை குவிதலும், குமுத மலர்தலும், வான்மீன் றோன்றலும், மாலைக்குரியனவாகிக் காலைக்குரியனவாக வுரைத்தமையாற் பொழுது மலைவாயிற்று. பிறவுமன்ன. ஆயின மொரோவிடத்துச் சிறப்பித்துரைத்த பொருட் கலங்காரமாக விவ் வாறுரைரைப்பினுஞ் சிறப்பெனக்கொள்க. (உ-ம்.) வெண்பா. - "மண்டபத்து மாணிக்கச் சோதியால் வாவிவாய்ப், புண்டரிக மாலைப் பொழுதலருந் - தண்டரளத், தாமஞ்சொரியுந் தகைநிலவான் மெல்லாம்பல், பூமலருங்காலைப் பொழுது." - இதனுட்டாமரை மாலையின் மலர்ந்ததாகவும், குமுதங் காலையின் மலர்த்ததாகவும், பொழுதுரிமைமாறி யுரைத்ததாயினுஞ் சிறப்ப லங்காரமாயிற்று. பிறவுமன்ன. இலக்கண விளக்கம். - "மாலையாமம் வைகறை யென்றா, காலை நண்பக லெற்பாடென்றா, வறுவகைத் தென்ப சிறு பொழுதவைதாம், படுசுடரமை யந்தொடங்கியையிரு, கடிகையளவை யகாணுங்காலே." - அகப்பொருள் விளக்கம். "அவற்றுள், கூதிர்யாமமுன் பனியென்றிவை, யோதியகுறிஞ்சிக் குரியவாகும். - வேனினண்பகல் பின்பனி யென்றிவை, பான்மையி னுரியபாலை தனக்கே. - மல்கு கார்மாலைக் குரிய. - இருள்புலர்காலை மருதத்திற்குரித்தே. - வெய்யோன்பாடு நெய்தற்குரித்தே. - மருதநெய்தலென் றிவையிரண்டற்கு, முரியபெரும் பொழுதிரு மூன்றும்மே." இவை மேற்கோள். எ-று. (8) | இடவுரிமை. Place. | 174. | குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென வரையே சுரமே புறவே பழனந் திரையே யவையவை சேரிடந் தானு நிரையே யைந்திணை நிலமெனப் படுமே. | | (இ-ள்.) நிறுத்தமுறையானே யிடவுரிமையாமாறுணர்த்துதும். இடவ குப்பினுண் முதல்வகுப்பாகக் குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்த லென விவையைந்நிலமெனவு மைந்திணையெனவும் வழங்கும். இவற்றுண்மலையு மலைசார்ந்தவிடமுங் குறிஞ்சி; சுரமுஞ் சுரஞ்சார்ந்தவிடமும் பாலை; காடுங்காடுசார்ந்தவிடமு முல்லை; வயலும் வயல்சார்ந்தவிடமு மருதம்; கடலுங்கடல் |
|
|