120தொன்னூல்விளக்கம்
பொழுதிற் குரியவை தோன்ற முறைவிடா துரைப்பது பொழு தெனுங் காலவுரி மையாம்.
இவ்வாறன்றி யொன்றற்குரிய பிறிதொன்றிற் றோன்றக்கூறல் பொழுது மலைவாம். -
வெண்பா. - "செங்கமலம் வாய்குவியத் தேங்குமு தங்கண்மலர, வெங்குநெடு வான்மீ
னினிதிமைப்பப் - பொங்குதையத், தோராழித்தேரோனெழிலாலு வந்ததே, நீராழி சூழ்ந்த
நிலம்." இதிற்றாமரை குவிதலும், குமுத மலர்தலும், வான்மீன் றோன்றலும்,
மாலைக்குரியனவாகிக் காலைக்குரியனவாக வுரைத்தமையாற் பொழுது மலைவாயிற்று.
பிறவுமன்ன. ஆயின மொரோவிடத்துச் சிறப்பித்துரைத்த பொருட் கலங்காரமாக விவ்
வாறுரைரைப்பினுஞ் சிறப்பெனக்கொள்க. (உ-ம்.) வெண்பா. - "மண்டபத்து மாணிக்கச்
சோதியால் வாவிவாய்ப், புண்டரிக மாலைப் பொழுதலருந் - தண்டரளத்,
தாமஞ்சொரியுந் தகைநிலவான் மெல்லாம்பல், பூமலருங்காலைப் பொழுது." -
இதனுட்டாமரை மாலையின் மலர்ந்ததாகவும், குமுதங் காலையின் மலர்த்ததாகவும்,
பொழுதுரிமைமாறி யுரைத்ததாயினுஞ் சிறப்ப லங்காரமாயிற்று. பிறவுமன்ன. இலக்கண
விளக்கம். - "மாலையாமம் வைகறை யென்றா, காலை நண்பக லெற்பாடென்றா,
வறுவகைத் தென்ப சிறு பொழுதவைதாம், படுசுடரமை யந்தொடங்கியையிரு,
கடிகையளவை யகாணுங்காலே." - அகப்பொருள் விளக்கம். "அவற்றுள், கூதிர்யாமமுன்
பனியென்றிவை, யோதியகுறிஞ்சிக் குரியவாகும். - வேனினண்பகல் பின்பனி
யென்றிவை, பான்மையி னுரியபாலை தனக்கே. - மல்கு கார்மாலைக் குரிய. -
இருள்புலர்காலை மருதத்திற்குரித்தே. - வெய்யோன்பாடு நெய்தற்குரித்தே. -
மருதநெய்தலென் றிவையிரண்டற்கு, முரியபெரும் பொழுதிரு மூன்றும்மே." இவை
மேற்கோள். எ-று. (8)
 

இடவுரிமை.
Place.
 

174.

குறிஞ்சி பாலை முல்லை மருத
நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென
வரையே சுரமே புறவே பழனந்
திரையே யவையவை சேரிடந் தானு
நிரையே யைந்திணை நிலமெனப் படுமே.
 
     (இ-ள்.) நிறுத்தமுறையானே யிடவுரிமையாமாறுணர்த்துதும். இடவ குப்பினுண்
முதல்வகுப்பாகக் குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்த லென விவையைந்நிலமெனவு
மைந்திணையெனவும் வழங்கும். இவற்றுண்மலையு மலைசார்ந்தவிடமுங் குறிஞ்சி;
சுரமுஞ் சுரஞ்சார்ந்தவிடமும் பாலை; காடுங்காடுசார்ந்தவிடமு முல்லை; வயலும்
வயல்சார்ந்தவிடமு மருதம்; கடலுங்கடல்