121இடவுரிமை
சார்ந்தவிடமு நெய்தலென்று வகுத்தார் புலவரென்றறிக. - அகப்பொருள் விளக்கம். -
"வரையே சுரமே புறவே பழனந், திரையே யவையவை சேர்தருமிடனே, யெனவீ
ரைவகைத் தனையிய னிலமே." எ-து. மேற்கோள். இவற்று ளொவ்வொரு திணைக்கு
வேறாகச் சில பொருள் வகுத்தவை கருப்பொருளென்றார் கற்றோர். இவை வருமாறு.
எ-று. (1)
 

175.

தெய்வஞ் செல்வர் சேர்குடி புள்விலங்
கூர்நீர் பூமர முணாப்பறை யாழ்பண்
டொழிலெனக் கருவீ ரெழுவகைத் தாகும்.
 
     (இ-ள்.) கருப்பொரு ளென்பவை யிவையென வுணர்த்துதும். தெய்வ முந்
தலைவனொடு தலைவியுங் குடியும் பறவையும் விளங்கு முரு நீரு மலரு மரங்களும்
விளையு முணாவும் பறையும் யாழு மிசைப்பாட்டுந் தொழிலு மெனச் சொல்லப் பட்ட
பதினான்கு கருப்பொரு ளொவ்வொரு திணைக்கு வேறு வேறாக வுளவென வகுத்தார்
கற்றோர். இவற்றுளோரிட வெல்லையுளடங்கா வெவ்விடத்து மெக்காலத்து மனைத்துலகு
மனைத்துயிருந் தானுள வாக்கவு நிலையி னிறுத்தவு முழுதற வொழிப்பவும் வல்லவொரு
மெய்க்கடவு ளன்றிக் குறுங்கோற் றேவராகப் பலரிலரென்று மெய்ம்மறை நூலாலறிவோ
மாயின மிந்நாட்டிருள் வழிவழங்கு முறையைச் சொல்லிக் காட்டுதும். - இலக்கண
விளக்கம். - "ஆரணங் குயர்ந்தோ ரல்லோர் புள்விலங், கூர்நீர் பூமர முணாப்பறை
யாழ்பண், டொழி லெனக் கருவீ ரெழுவகைத் தாகும்." எ-து. மேற்கோள். எ-று. (2)
 

176.

குறிஞ்சிக் கருப்பொருள் குமரன் றெய்வமே
வெறியணிப் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளிமயின் மறப்புலி குடாவடி
கறையடி சீயஞ் சிறுகுடி யருவி
நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்த
ளாரந் தேக்கதி லசோக நாகம்
வேர லைவனந் தோரை யேனல்
கறங்கிசைத் தொண்டகங் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகொ ளைவனம் வித்தல் செறிகுரற்
பைந்தினை காத்தல் செந்தே னழித்தல்
செழுங்கிழங் ககழ்தல் கொழுஞ்சுனை யாடலே.
 
     (இ-ள்.) குறிஞ்சிக் கருப்பொருளா மாறுணர்த்துதும். குமரன் றெய்வமே;
பொருப்பனும் வெற்பனுஞ் சிலம்பனுங் குறத்தியுங் கொடிச்சியுந் தலைவனொடு