122தொன்னூல்விளக்கம்
தலைவியே; குறவருங் கானவருங் குறத்தியருங் குடியே; கிளியுமயிலு முரியபறவையே;
புலியுங் கரடியும் யானையுஞ் சிங்கமும் விலங்கே; சிறுகுடி யூரே; அருவியுஞ் சுனையு
நீரே; வேங்கையுங் குறிஞ்சியுங் காந்தளுஞ் சந்தனமுந் தேக்கு மகிலு மசோகும்
புன்னையு மலரே மரமே; மூங்கினெல்லு மைவனநெல்லுந் தோரைநெல்லுந் தினையு
முணாவே; தொண்டகம் பறையே; குறிஞ்சியாழ் யாழே; குறிஞ்சி யிசைப்பாட்டே; வெளி
கொள்ளலும் ஐவனம் விரைத்தலும் பைந்தினை காத்தலுந் தேனை யழித்தலுங் கிழங்கு
தோண்டலுஞ் சுனையிற் குளித்தலுந் தொழிலே; என விப்பதினால் வகையுங் குறிஞ்சிக்
கருப்பொருளா மெனக் கொள்க. எ-று. (3)
 

177.

பாலைக் கருப்பொருள் பகவதி தெய்வமே
காளை விடலை மீளி யெயிற்றி
யெயின ரெயிற்றியர் மறவர் மறத்தியர்
புறாப்பருந் தெருவை செந்நாய் குறும்பு
குழிவறுங் கூவல் குராஅ மராஅ
வழிஞை பாலை யோமை யிருப்பை
வழங்குகதி கொண்டன செழும்பதி கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகலிற் சூறை பரிவெழுந் தாடலே.
 
     (இ-ள்.) பாலைக் கருப்பொருளா மாறுணர்த்துதும். காளி தெய்வமே; காளையும்
விடலையு மீளியு மெயிற்றியுந் தலைவனொடு தலைவியே; எயினரு மெயிற்றியரு மறவரு
மறத்தியருங் குடியே; புறாவும் பருந்துங் கழுகும் பறவையே; செந்நாய் விலங்கே; குறும்பு
தானூரே; கேணி நீரே; குராவு மராவுஞ் சிறுபூளையும் பாலையு மாவுங் கள்ளியு மலரே
மரமே; ஓடிவழியிற் பறித்தனவும் புக்குமறு நன்னாட்டிற் றிருடினவு முணாவே; துடி
பறையே; பாலையாழ் யாழே; பஞ்சுரமும் வெஞ்சமமு மிசைப்பாட்டே; பகற்சூறை குளித்த
றொழிலே; என விப்பதினால் வகையும் பாலைக் கருப்பொருளா மெனக் கொள்க.
எ-று. (4)
 

178.

முல்லைக் கருப்பொருண் முராரி தெய்வமே
தொல்லைக் குறும்பொறை நாடன் றோன்றன்
மடியாக் கற்பின் மனைவி கிழத்தி
யிடைய ரிடைச்சிய ராய ராய்ச்சியர்
கான வாரண மான்முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்கலர்ப் பிடவங்
கொன்றை காயா மன்றலங் குருந்தக்