| தாற்றுக் கதிர்வரகு சாமை முதிரை யேற்றுப் பறைமுல்லை யாழ்சா தாரி சாமை வரகு தரமுடன் வித்த லவைகளை கட்ட லரிதல் கடாவிடல் செவிகர் கொன்றைத் தீங்குழ லூதன் மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் குரவை யாடல் குளித்தல் கான்யாறே. | |
(இ-ள்.) முல்லைக் கருப்பொருளா மாறுணர்த்துதும். விட்டுணு தெய்வமே; குறும்பொறை நாடனுந் தோன்றலுங் கற்பின் மனைவியுங் கிழத்தியுந் தலைவனொடு தலைவியே; இடையரு மிடைச்சியரு மாயரு மாய்ச்சியருங் குடியே; காட்டுக்கோழி புள்ளே; மானு முயலும் விலங்கே; பாடி யூரே; குறுஞ்சுனையுங் கான்யாறு நீரே; துளசியு முல்லையுங் காந்தளுங் கொன்றையுங் காயாவுங் குருந்தமு மலரே மரமே; வரகுஞ் சாமையுங் காராமணிப் பயனு முணாவே; பம்பைப் பறையே; முல்லையாழ் யாழே, சாதாரி யிசைப் பாட்டே; சாமை வரகு விதைத்தலு மவற்றின் களைகளைக் கட்டலு மவற்றை யறுத்தலுங் கடாவிட் டவற்றைத் தெழித்தலுங் கொன்றையங் குழலூதலும் பசுமுதல் மூவின மேய்த்தலு மிடபந் தழுவலுங் குரவை யாடலுங் கான்யாறு குளித்தலுந் தொழிலே; என விப்பதினால் வகையு முல்லைக் கருப்பொருளா மெனக்கொள்க. எ-று. (5) |
179. | மருதக் கருப்பொருள் வாசவன் றெய்வமே விருதமை யூரன் வெண்டார் கிழவன் கெழுதகு கற்பிற் கிழத்தி மனைவி யுழவ ருழத்தியர் கடையர் கடைச்சியர் மழலை வண்டான மகன்றி னாரை யன்னம் போதா நன்னிறக் கம்புள் குருகு தாரா வெருமை நீர்நாய் பெருகிய சிறப்பிற் பேருர் மூதூர் யாறு மனைக்கிண ரிலஞ்சி தாமரை நாறிதழ்க் கழுநீர் நளிமலர்க் குவளை காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதஞ் செந்நெல் வெண்ணெ லந்நெல் லரிகிணை மன்றன் முழவ மருதயாழ் மருத மன்றணி விழாக்கொளல் வயற்களை கட்ட றோயதல் கடாவிடல் பொய்கையா றாடலே. | |