127பற்றுதலுரிமை
     (இ-ள்.) இதுவுமது. வேற்றரசர்கட்குத் தூதுரை யுரைக்கப் போத லந்தணர்க்கு
மரசர்க்கு மூரித்தெனக் கொள்க. எ-று. (4)
 
187. சிறப்புப் பெயர்பெறிற் செப்பிய விரண்டு
முதற்குரிய மரபின வொழிந்தோ ரிருவர்க்கும்.
 
     (இ-ள்.) இதுவுமது. அரசனாற் சிறப்புப் பெயரைப் பெற்றவ ராயின வணிகர்
சூத்திரரென்று மிருவர்க்கு நாடு காவற் றொழிலுந் தூது போதற் றொழிலு முரியன
வெனக் கண்டுணர்க. ஆகையிற் சொல்லப் பட்ட தொழில்களு மித்தொடக்கத்தன பலவு
மொருவர்க் குரியனவாகி மற்றொருவர்க் குரியன வாகக்கூறா தம்முறை காப்பது சாதி
யுரிமையா மெனக் கொள்க. எ-று. (5)
 

பற்றுதலுரிமை.
Relation.
 

188. வெறுப்புவப் பிரக்கம் வெகுளி நாணந்
திறத்துணி வச்சந் தேறா மயலவாப்
பலவு மக்கட் பலபற் றென்ப
பற்றுறும் வழியும் பற்றுற் றார்க்கு
மற்றுறு மியற்கையும் பற்றிறு வகைத்தே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே பற்றுத லுரிமையா மாறுணர்த்துதும். வெறுப்பு
முதலாகச் சொல்லப் பட்டவையும் பலவு மக்களிடத்துத் தோன்றும் பற்றுதலாகும்.
ஆகையிற் கேட்போ ரிடத்துத்தா னப்பற்றினைக் கிளப்புந் தன்மையும் பற்றுடையார்க்
கியலுந் தன்மையு மறிந் தம்முறையே பிறழா துரைப்பது பற்றுத லுரிமை யெனப்படும்.
இவற்றுட் கேட்போர் மனதி லொன்றன்மேல் வெறுப்பு மொன்றன் மேலாசையு மோரிடத்
தச்சமு மோரிடத் தூக்கமு மிவர்க்கே யிரக்கமு மவர்க்கே வெகுளியு மித்தொடக்கத்தன
பல பற்றுதலைக் கிளப்புதல் கற்றோர் தொழிலேயாகி யதற்கதற் குரியபொருளு முரிய
வணியுந்தான் றெரிந்துரைப்ப தறிவோர் கடனெனக் கொள்க. அன்றியுஞ் சொல்லப்பட்ட
பலவகைப் பற்றுத லெழும்பின தன்மையான் மனிதரும் பலகுண முடையராவர்.
அங்ஙனங் கடுஞ்சினத் தா னினைவு மொழியு நடையும் வேறாயவன்றான் சினமேயாறி
நாணங்கொ ண்டக்கா லவ னினைவு மொழியு நடையும் வேறா மலவோ. பிறவுமன்ன.
ஆகையி லெழும்பின வல்லவப் பற்றுதற் குரியவை செப்புத துரிமையாமெனக் கொள்க.
இவ்வழியும் வழுவாது காப்பது கற்றோர் கடனே. எ-று.