132தொன்னூல்விளக்கம்
ஆகையி லெல்லாந் தமிழ்ச் சொல்லாயினு மவ்வவ நாட்டுத் தேசிகச் சொல்லாகப்
பலமொழி தத்தங் குறிப்பான் வழங்கும். (உ-ம்.) தென்பாண்டிநாட்டார் ஆவினை -
பெற்றம், எ-ம். குட்டநாட்டார், தாயை - தள்ளை, எ-ம். பன்றிநாட்டார், செறுவை -
செய், எ-ம். கற்காநாட்டார், வஞ்சரை - கையர், எ-ம். வேணாட்டார், தோட்டத்தை -
கிழார், எ-ம். குடநாட்டார், தந்தையை - அச்சன், எ-ம். பூழி நாட்டார், சிறுகுளத்தை-
பாழி, எ-ம். மலாடுநாட்டார், தோழியை - இகுளை, எ-ம். சீதநாட்டார், தோழனை -
எலுவன், எ-ம். புனனாட்டார், தாயை - ஆய், எ-ம். அருவாநாட்டார், சிறுகுளத்தை -
கேணி, எ-ம். அருவா வடதலைநாட்டார், புளியை - எகினம், எ-ம்.
இத்தொடக்கத்தனபலவு மவ்வவத் தமிழ் நாட்டார் வழங்குவரெனக் கண்டுணர்க. கொடுந்
தமிழ்நாடு 12, - வெண்பா. - "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வெண்பூழி, பன்றி
யருவா வதன்வடக்கு - நன்றாய, சீதமலாடு புனனாடு செந்தமிழ்சே, ரேதமில் பன்னிரு
நாட்டெண்." எ-று, (3)
 

194.

செந்தமிழ் வழக்குரை செப்புங் காலை
யிலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றொருமூ வகைத்தா மியல்பு
மிடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
யெனுமுத் தகுதியோ டிருமூன் றாகும்.
 
     (இ-ள்.) செந்தமிழ்ச் சொல்லுரிமையா மாறுணர்த்துதும். செந்தமிழ் வழக்குச்சொல்
லாறுவகைப்படும். அவற்று ளிலக்கண மொழியும், இலக்கணப்போலி மொழியும், மரூஉ
மொழியு மென்பன மூன்று மியல்பு வழக்கு. இடக்க ரடக்கல், மங்கலமரபு, குழூஉக்குறி,
என்பன மூன்றுந் தகுதிவழக்கு. ஆகையி லிலக்கண முறையால் வருவன இலக்கண
மொழியெனப்படும். (உ-ம்.) நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், கூழ், பால், பாகு, பாளிதம்,
எ-ம். வரும். இலக்கண மில்லாதெனினும் மிலக்கண முடையனபோலச் சான்றோரால்
வழங்குவன இலக்கணப்போலி மொழியெனப்படும். (உ-ம்.) இல்முன் - முன்றில், எ-ம்.
கோவில் - கோயில், எ-ம். பொதுவில் - பொதியில், எ-ம். யாவர் - யார், எ-ம். கண்மீ
- மீகண், எ-ம். எவன் - என், எ-ம். வரும். இலக்கணமுறையிற் சிதைந்து வருவன
மரூஉமொழி யெனப்படும். (உ-ம்.) சோழனாடு - சோணாடு, எ-ம். மலையனாடு - மலாடு,
எ-ம். மட்கட்டி - மண்ணாங் கட்டி, எ-ம். வரும். இம்மூவகையு மியல்புவழக்
கெனக்கொள்க. அன்றியு மறைவாகத் தம்பொருளைத் தருவன இடக்க ரடக்க
லெனப்படும். (உ-ம்.) கான்மே னீர்பெய்து வருதும், வாய்பூசிவருதும், அந்திதொழுது
வருதும், முதலிய பலவுமாம். பொருட்குறை மறைத்துப் புகழ்மொழியாக வருவன மங்கல
மரபுரையெனப்படும். (உ-ம்.) செத்தாரை - துஞ்சினார், எ-ம். ஓலையை -