136தொன்னூல்விளக்கம்
தொடுவன - வளையே, பூண்பன-ஆரமே. பிறவுமன்ன. ஆயுதவினத்து ளெய்வன -
கணையே, எறிவன - வேலே, வெட்டுவன - வாளே, குத்துவன - ஈட்டியே, பிறவுமன்ன.
இவையே இத்தொடக்கத்தன பல வினைச்சொல்லு முரிமை பற்றிவந்த
சொல்லெனக்கொள்க. இவையேயன்றி வாச்சியத்திற்கெல்லாம் பொதுவினை முழங்கல்,
இயம்பல், படுத்தன், முதலிய பலவும் அணிவகைக் கெல்லாம் பொதுவினை. அணிதல்,
தாங்கல், மெய்ப்படுத்தல், முதலிய பலவும் படைவகைக் கெல்லாம் பொதுவினை.
தொட்டல், வழங்கல், பயிற்றல், முதலியபலவும் படைத்தொழிற் கெல்லாம் பொதுவினை.
ஆகையி லித் தன்மைப் பொரு டனித்தனி வருங்கா லதற்கதற்குரிய வினையொடு
முடிப்பது சிறப்பாம். ஆயினுங் கூறிய வினப்பொருட் பலவுங் கூட்டி யொன்றுபடுத்தி
னுரியவினைச் சொற்கொண்டு முடிப்ப தொன்றற் கேற்புழி, மற்றவற்றிற் கேலாமையால்
வழுவாம். அங்ஙனம் யாழுங் குழலும் பறையுந் தடவினா ரெனினு மூதினா ரெனினுங்
கொட்டினா ரெனினுமாகா. பொதுச் சொல்லாக முழங்கினார், இயம்பினார்,
படுத்தாரென்பது முறையே. அங்ஙனம் பசும்பொன்முடியும், மின்மணிக்குழையும்,
பொன்னொளிவளையு, முதலாயின வணிந்தார், தாங்கினார், என்பதும் வேலும் வாளும்
வளையுங் கணையும் வழங்கினார் பயிற்றினாரென்பது முரித்தே. பிறவுமன்ன.
இவ்வாறுரிமை நீங்கிய பொதுமொழி யிங்ஙன முரியனவா மெனக்கொள்க. எ-று. (6)
 
197. திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ
டியற்பெய ரேற்றிடிற் பின்வர லுரித்தே.
 
     (இ-ள்.) சொல்லடுக் குரிமையா மாறுணர்த்துதும். திணைமுதலாயின வற்றைப்
பற்றி யொரு பொருண் மேற் பலபகுபதப் பெயரையடுக்கி யுரைப்புழி யப்பொருட்குரிய
வியற்பெயர் கடையில் வந்து முடிவதே யடுக்கிய பல பெயர் மொழியிடத் துரிமையா
மெனக்கொள்க. (உ-ம்.) - விருத்தம். - "கார்வளர் வெற்பினன் குரவற் காவலன்,
போர்வளர் வில்லினன் பொறிச்சொல் வெஞ்சினன், வார்வளர் முரசதிர் வகுல
னென்பவன், பார்வளர் நலங்கெடப் படைகொண் டெய்தினான்." எ-ம். பிறவுமன்ன.
இவ்வா றியற்பெயர் கடையி லன்றி யிடையினு முதலினும் வரப்பெறிற் சிறுபான்மையா
மென்றுணர்க. எ-று. (7)
 
198. அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கோர்சொல்
லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.
 
     (இ-ள்.) மற்றொருசொல் லடுக்குரியமையா மாறுணர்த்துதும். ஆகையி லசை நிலை
மொழி இரண்டாக வடுக்கி வரவும், விரைவு, வெகுளி, அவலம், உவகை, அச்ச, முதலிய
பொருண்மொழி இரண்டு மூன்றுமாக வடுக்கி