14தொன்னூல்விளக்கம்
வாராமையானும் அவ்விடங்களில் அது நீங்கலாகி அளபெடுக்கு மளபெடை
நாற்பதுடனே "விலஃஃகு வீங்கிரு ளோட்டுமேமாத ரிலஃஃகு மூத்தினினம்."
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர், வெஃஃகுவார்க்கில்லை வீடு." எனக்குறிலிணைக்கீழ்க்
குறிற்கீழிடையில்வந்த அளபெடையுங்கூடி நாற்பத்திரண்டாதல் காண்க. ஆயினும் ஒற்றள
பெடை செய்யுளிடத்தே யன்றிப் பெறாதெனக் கொள்க. சூத்திரம். "வன்மையொடு
ரஃகான் ழஃகானொ ழித்தாங், கன்மையாய்தமோ டளபெழுமொரோ வழி." எ-ம்.
கூறினார். நன்னூல். "ஙஞண நமன வயலளவாய்த மளபாங் குறிலிணை குறிற்கீழி
டைகடை, மிகலேயவற்றின் குறியாம்வேறே." இவை மேற்கோள். ஆய்தம்,
உயிர்க்குறிலும், உயிர் மெய்க்குறிலும் இருமருங்கு நின் றெழுப்ப இரு சிறகினா
லெழும்பறவையி னுடல்போல எழுந்தொலித்தலால் இறுதிக்கண் விலக்கினார். ஒற்றுத்
தன்மாத்திரையி னீண்டளபெடுத்தலின் காரணத்தான் முதலெழுத்தின் ஒலிவடிவினும்
வரிவடிவிற் குறியினும் வேறாய் ஒற்றள பெடையெனப் பெயராய்ச்
சார்பெழுத்தினொன்றாயின. அளபெடைக்கு அளபு, புலிதம் எ-ம். கூறுவர், எ-று. (15)
 
19. கண்ணிமை கைந்நொடி காட்டுமாத்திரையி
லஃகியமவ்வு மாய்தமுங்காலே
உ இக்குறளொற் றாய்தமரையே
குறிலே ஐ ஒளக்குற ளொற்றள பொன்றே
நெடிலிரண் டுயிரளபொரு மூன்றென்ப.
 
     (இ-ள்.) மாத்திரையா மாறுணர்த்துதும், கண்ணிமையும் கைந்நொடியும் எழுத்தின்
மாத்திரைக் களவாம். இவ்வளவின் றன்மையால், ஆய்தக் குறுக்கமும் மகரக்குறுக்கமும்
கான்மாத்திரை. ஒற்றும், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் அரைமாத்திரை.
குற்றெழுத்தும் ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒருமாத்திரை.
நெட்டெழுத்து இரண்டுமாத்திரை. உயிரளபெடைமூன்றுமாத்திரை பெறுமெனக்கொள்க. -
சூத்திரம்." "உன்னல்காலே யூன்றலரையே, முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே."
எ-ம். கூறினார். அன்றியும் செய்யுட்கண் வேண்டுமிடத்து, குற்றியலிகரமும்
குற்றியலுகரமும் உயிராகவெண்ணாதிருக்கவும்; ஒற்றளபெடை வேண்டுமிடத்து
உயிர்மெய்போல குற்றெழுத்தாகவெண்ணவும்; உயிரளபெடை நெட்டெழுத்தாகவும்
குற்றெழுத்தாகவும்எண்ணவுப்படும். (உ-ம்.) குறள். "குழலினிதியாழினிதென்பர்
தம்மக்கண் மழலைச்சொற்கேளாதவர்." இதனுள்இயாழ்என்னுங் குற்றியலிகரம்எண்ணப்ப
டாதென்க. "எஃஃகிலங்கியகையராயின்னுயிர், வெஃஃகுவார்க்கில்லைவீடு." இதனுள்
ஈராய்தம்வந்த வொற்றளபெடை எண்ணப்படாதென்க. "கற்றதினாலாயபயனென்
கொல்வாலறிவ, னற்றாடொழா அரெனின்." இதனுள்