146தொன்னூல்விளக்கம்
தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்,
தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ; தேமா நறும்பூ,
புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளநறும்பூ; தேமாநறுநிழல், புளிமாநறுநிழல்,
கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல்; இவை வெண்பாவினுள் வருவனவல்ல. கலியினுள்ளு
மகவலுள்ளும் பெரும்பாலுங் குற்றியலுகரம் வந்தவிடத் தன்றி வாரா. வஞ்சிப்பாவினுட்
பெரும்பாலும் வரவு மோரடியு ளிரண்டு நாலசைச்சீர்க் கண்ணுற்று நிற்கவும் பெறும்.
(வ-று.) "அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு, வேங்கைவாயின் வியன்குன்றூரன்."
இவ்வஞ்சியடி யிலிரண்டு நாலசைச்சீர் வந்தன காண்க. - யாப்பருங்கலம். -
"நாலசைச்சீர் பொதுச்சீர் பதினாறே." என்றார். - காரிகை. - "ஈரசை நராற்சீ ரகவற்
குரிய வெண்பா வினவா, நேரசை யாலிற்ற மூவசைச்சீர் நிரையா லிறுப,
வாரசைமென்முலை மாதே வருப வஞ்சிக் குரிச்சீ, ரோரசையே நின்றுஞ் சீராம்
பொதுவொரு நாலசையே. - தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற், காமாங்
கடைகா யடையின் வெண்பாவிற் கந்தங் கனியாய், வாமாண்கலை யல்குன்மாதே வருப
வஞ்சிக் குரிச்சீர், நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே." இவை
மேற்கோள். எ-று. (4)
 

206.

பொதுச்சீ ரிறுதியு முரிச்சீ ரிறுதியுந்
தளைக்கொக்கு மசைச்சீ ரியற்சீ ரனைத்தே
பொதுச்சீர் வெள்ளையுட் புணரா வுக்குற
ளல்லன கலியு மகவலுஞ் சேரா
வஞ்சியு ளனைத்தும் வரினு மோரடி
யெல்லையு ளொன்றுமே லிணையிற் றொடரா.
 
     (இ-ள்.) சீரிலக்கணத்துக் கோர் சிறப்பிலக்கண மாமாறுணர்த்துதும்.
தளைமுறையானே பூவெனும் நேரீற்றுப் பொதுச்சீ ரெட்டும் வெண்சீர் போலக்
கொள்ளவும். நிழலெனு நிரையீற்றுப் பொதுச்சீ ரெட்டும் வஞ்சிச்சீர் போலக்
கொள்ளவும். அசைச்சீ ரிரண்டும் இயற்சீர் போலக் கொள்ளவு முறையென் றுணர்க.
ஆகையி லினிக்கூறும்படி வெண்சீர்வந்து நேர்வரின் வெண்டளையாவது போலவும்,
நிரைவரின் கலித்தளையாவது போலவும், நேரீற்றுப் பொதுச்சீ ரொன்றலு
மொன்றாமையும் வெண்டளை கலித்தளை யெனப்படும். அங்ஙனம் வஞ்சிச்சீர்
முன்னிரைவரி னொன்றிய வஞ்சித்தளையு, நேர்வரி னொன்றா வஞ்சித்தளையு,
மென்பதுபோல நிரையீற்றுப் பொதுச் சீர்த்தளையும் வழங்கும். அவ்வா றியற்சீ
ரொன்றலு மசைச்சீ ரொன்றலு மாசிரியத் தளையெனவு, மியற்சீர் விகற்பமும் வெண்டளை
யெனவுங் கொள்க. அன்றியும், பொதுச்சீ ரென்றும் வெண்பாவினுள் வாரா.
ஆசிரியத்துள்ளுங் கலியுள்ளுங் குற்றுகரம் வந்துழியன்றி வாரா, வஞ்சியுட் குற்றுகரம்
வாராதேயு மெல்லாம் வரப்பெறு மாயினும் பெரும்பான்மையா லோ