147செய்யுளுறுப்பு
ரடியுள் ளொன்றன்றி வாரா. இரண்டு வரினுந் தொடர்ந்து நில்லா வெனக் கண்டுணர்க. -
காரிகை. - "தண்ணிழ றண்பூ நறும்பூ நறுநிழ றந்துறழ்ந்தா, லெண்ணிரு நாலசைச்
சீர்வந் தருகுமினி யவற்றுட், கண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியோ டொக்கு,
மொண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கு மொண்டளைக்கே. - தன்சீர் தனதொன்றிற்
றன்றளையாந் தணவாத வஞ்சி, வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர்வகுத்த,
வெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்டளையா, மொண்சீ ரகவ லுரிச்சீர்
விகற்பமு மொண்ணுதலே." இவை மேற்கோள். எ-று. (5)
 

தளையிலக்கணம் வருமாறு. -
Metrical Connexion.
 

207.

தளையாஞ் சீர்தம்முட் டலைப்படுங் கட்டே
யவையேழ் வகைய வாகு மவற்று
ளாசிரியத் தளையா மியற்சீ ரொன்றல்.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே தளையிலக்கண மாமாறுணர்த்துதும். கூறிய
பலவகைச்சீரு மொன்றோடொன்று பிணிக்கப்பட்டுத் தொடர்ந்து வருமுறையே தளை
யெனப் படும். இவையே நேரொன் றாசிரியத்தளையும், நிரையொன்றாசிரியத்தளையும்,
இயற்சீர்வெண்டளையும், வெண்சீர்வெண்டளையும், கலித்தளையும், ஒன்றிய
வஞ்சித்தளையும், ஒன்றா வஞ்சித்தளையும், என தளை யெழுவகைப் படும். - "சீரொடு
சீர்தலைப் பெய்வது தளையவை, யேழென மொழிப வியல்புணர்ந் தோரே."
என்பதியாப்பருங்கலம். ஆகையி லிவற்று ளியற்சீர் வந்து நின்றசீ ரீற்றசையும் வருஞ்சீர்
முதலசையு மொன்றிவரி னாசிரியத் தளையாம். ஆகையிற் றேமா புளிமா வரவே
தேமாவுங் கூவிளமும் வரப்பெறி னேர் நேரோ டொன்றிய வதனா னேரோன் றாசிரி
யத்தளையாம். கருவிளம் கூவிளம் வரவே கருவிளமும் புளிமாவும் வரப் பெறி னிரை
நிரையோ டொன்றியவதனா னிரையொன் றாசிரியத் தளையாம். - "ஈரசைச் சீர்நின்
றினிவருஞ் சீரொடு, நேரசை யொன்ற னிரையசை யொன்றலென், றாயிரு வகைத்தே
யாசிரியத்தளை." என்பதியாப் பருங்கலம். (வ-று.) "திருமழை தலைஇய விருணிற
விசும்பின் விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத் தவர்தேர் சென்ற வாறே." என
விருவகை யாசிரியத்தளை வந்தவாறு காண்க. எ-று. (6)
 

208.

வெண்டளை யென்பது வெண்சீ ரொன்றலு
மியற்சீர் விகற்பமு மெனவிரு வகைத்தே.
 
     (இ-ள்.) வெண்டளை யாமாறுணர்த்துதும். ஆகையி லியற்சீர் வந்து நின்ற
சீரிறுதியும் வருஞ்சீர் முதலுமொன்றாது நேர்முன்னிரையு நிரைமுன்