15மூன்றாவதெழுத்தின்விகாரம்
உயிரளபெடை ஈரெழுத்தாக எண்ணப்பட்டதென்க. வேண்டுமிடத்து எண்ணப்படாமையும்
பெறும். - யாப்பருங்கலம். "தளைசீர் வண்ணந்தாங் கெடவரினே, குறுகிய விகரமுங்
குற்றியலுகரமு, மளபெடை யாவியு மல கியல்மிலவே." எ-து. மேற்கோள், எ-று. (16)
 
20. முதலீற்றுயிரிரு மொழியே சேர்புளி
இ ஈ எ ஐயீறியையும் யவ்வே
மற்றையுயிர்க்கீழ் வகரம்புணரும்.
 
     (இ-ள்.) புணர் பெழுத்தாமாறுணர்த்துதும். உயிரான் முடிந்த சொல்லும்
உயிராற்றுவக்கின சொல்லுந் தம்முட் புணருங்கால் அவ்விரண் டுயிர்நடுவே
ஓரொற்றிசைத்தல் வேண்டும். இசைப்படு மெழுத்தே புணர்பெழுத் தெனப்படும். இ, ஈ,
எ, ஐ, என்னு நிலைமொழி உயிரீற்றின்முன் வருமொழி பன்னீ ருயிரும்புணரில்
யகரவுடம்படு மெய்யாம். அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள, என்னு நிலைமொழி
உயிரீற்றின்முன் வருமொழி பன்னீ ருயிரும் புணரில் வகரவுடம்படு மெய்யாம்.
ஏகாரவீற்றின் முன் பன்னீருயிரும் புணரில் இவ்விருவிதியும் பெறும். (உ-ம்.) மணி +
அழகு = மணியழகு; தீ + எழுந்தது = தீயெழுந்தது; சே + அழகு = சேயழகு; கை +
அழகு = கையழகு, எ-ம். மர + இலை = மரவிலை; பலா + இலை = பலாவிலை; கடு +
இது = கடுவிது; பூ + இதழ் = பூவிதழ்; தே + அடிமை = தேவடிமை; கோ + அழகு =
கோவழகு; கௌ + எகினன் = கௌவெகினன். எ-ம். அரசனே + அவன் =
அரசனேயவன்; அரசனே + அவன் = அரசனேவவன். எ-ம். வரும். நன்னூல் "இ ஈ ஐ
வழி யவ்வு மேனையுயிர்வழிவவ்வு மேமுனிவ்விருமையு, முயிர்வரினுடம்படு
மெய்யென்றாகும்" எ-து. மேற்கோள். எ-று. (17)

இரண்டாவதெழுத்தின் வகுப்பு. - முற்றிற்று.
 

மூன்றாவதெழுத்தின்விகாரம்.
Chapter III - Changes of Letters.
 

21. திரிபழி வாக்கந்
திரட்டுநால் விகாரம்.
 
     (இ-ள்.) விகாரமா மாறுணர்த்துதும். பதத்தொடு பதம்புணருங் காற்
சந்திகாரணமாகப் பலமுறை நிலைப்பத வீற்றெழுத்தாயினும் வரும்பத முத
லெழுத்தாயினும் பலவிடத் தொருப்பட இரண்டும் வேறெழுத்தாகத் திரிதலு முற்றுங்
கெடுதலுமாகும். பலமுறை யிருபதநடுவே ஆக்கமாக ஓரெழுத்து