151செய்யுளுறுப்பு
நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்த கோன்,
றடங்கொடாமரை யிடங்கொள்சேவடி தலைக்குவைப்பவர் தமக்கு வெந்துயர்
தவிர்க்குமே." - என வொன்பதின் சீர்க்கழிநெடிலடியால் வந்தசெய்யுள். -
"கைத்தலத்தழற் கணிச்சி வைத்திடப் புறத்தொருத்தி கட்கடைப்படைக்
கிளைத்ததிறலோரா, முத்தலைப் படைக்கரத் தெமத்தர்சிற் சபைக்குணிற்கு
முக்கணக்கருக்கொருத்தர் மொழியாரோ, நித்திலத் தினைப்பதித்த கச்சறுத்தடிக்கனத்து
நிற்குமற்புதத் தனத்தினிடையேவே, ளத்திரத்தினிற்றொடுத்து விட்டு நெட்டயிற்கணித்தி
லக்கணுற்றிடச் செய்விக்கு மதுதானே" - என வொன்பதின்சீர் மிக்க கழிநெடிலடியால்
வந்த செய்யுள். - யாப்பருங்கலம். - "குறளடி சிந்தடி யளவடி நெடிலடி, கழிநெடி
லடியெனக் கட்டுரைத் தனரே. - குறளடி சிந்தடி யிருசீர் முச்சீ, ரளவடி நெடிலடி நாற்சீ
ரைஞ்சீர், நிரனிரை வகையா னிறுத்தனர் கொளலே. - கழிநெடி லடியே கசடறக்கிளப்பி,
னறுசீர் முதலா வையிரண்டீறா, வருவன பிறவும் வகுத்தனர் கொளலே." -
தொல்காப்பியம். - "நாலெழுத் தாதி யாக வாறெழுத், தேறிய நிலைத்தே குறளடி
யென்ப. - எழெழுத் தென்ப சிந்தடிக் களவே, யீரெழுத் தேற்ற மல்வழி யான. -
பத்தெழுத் தென்ப நேரடிக் களவே, யொத்த நாலெழுத் தொற்றலங் கடையே. - மூவைந்
தெழுத்தே நெடிலடிக் களவே, யீரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப. -
மூவாறெழுத்தே கழிநெடிற் களவே,யீரெழுத்துமிகுதலு மியல்பென மொழிப. - உயிரில்
லெழுத்து மெண்ணப்படாஅ, வுயிர்த்திற மயக்க மின்மையான.' - காரிகை. - "குறளிரு
சீரடி சிந்துமுச் சீரடிநாலொருசீர றை தருகாலை யளவொடு நேரடி யையொருசீர்,
நிறைதரு பாத நெடிலடியா நெடுமென் பணைத்தோட், கறைகெழு வெற்க ணல்லாய்
மிக்க பாதங் கழிநெடிலே." இவைமேற்கோள். எ-று. (10)

............................

தொடையிலக்கணம் வருமாறு:-

Rhyme.

212. தொடையென்ப தீரடி தொடுப்ப தாமவை
யடைமுதன் மோனை யந்த மியைபே
யிடையே யெதுகை யெதிர்மொழி முரணள
பெடையே யளபா மெனவை வகையே.
 
     (இ-ள்.) நிறுத்த முறையானே தொடையுந் தொடைவிகற்பமு மாமா றுணர்த்துதும்.
மேற்கூறிய பலவகையடிக டம்முள் ளிரண்டா யிணைந்து தொடுப்பது
தொடையெனப்படும். இவையே மோனைத்தொடையும் - இயைபுத் தொடையும் -
எதுகைத்தொடையும் - முரண்தொடையும் - அளபுத்தொடையும் - என வைவகைப்
படும். இவற்றுண் முதலெழுத்மோனைத்தொடை.