நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்த கோன், றடங்கொடாமரை யிடங்கொள்சேவடி தலைக்குவைப்பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே." - என வொன்பதின் சீர்க்கழிநெடிலடியால் வந்தசெய்யுள். - "கைத்தலத்தழற் கணிச்சி வைத்திடப் புறத்தொருத்தி கட்கடைப்படைக் கிளைத்ததிறலோரா, முத்தலைப் படைக்கரத் தெமத்தர்சிற் சபைக்குணிற்கு முக்கணக்கருக்கொருத்தர் மொழியாரோ, நித்திலத் தினைப்பதித்த கச்சறுத்தடிக்கனத்து நிற்குமற்புதத் தனத்தினிடையேவே, ளத்திரத்தினிற்றொடுத்து விட்டு நெட்டயிற்கணித்தி லக்கணுற்றிடச் செய்விக்கு மதுதானே" - என வொன்பதின்சீர் மிக்க கழிநெடிலடியால் வந்த செய்யுள். - யாப்பருங்கலம். - "குறளடி சிந்தடி யளவடி நெடிலடி, கழிநெடி லடியெனக் கட்டுரைத் தனரே. - குறளடி சிந்தடி யிருசீர் முச்சீ, ரளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர், நிரனிரை வகையா னிறுத்தனர் கொளலே. - கழிநெடி லடியே கசடறக்கிளப்பி, னறுசீர் முதலா வையிரண்டீறா, வருவன பிறவும் வகுத்தனர் கொளலே." - தொல்காப்பியம். - "நாலெழுத் தாதி யாக வாறெழுத், தேறிய நிலைத்தே குறளடி யென்ப. - எழெழுத் தென்ப சிந்தடிக் களவே, யீரெழுத் தேற்ற மல்வழி யான. - பத்தெழுத் தென்ப நேரடிக் களவே, யொத்த நாலெழுத் தொற்றலங் கடையே. - மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே, யீரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப. - மூவாறெழுத்தே கழிநெடிற் களவே,யீரெழுத்துமிகுதலு மியல்பென மொழிப. - உயிரில் லெழுத்து மெண்ணப்படாஅ, வுயிர்த்திற மயக்க மின்மையான.' - காரிகை. - "குறளிரு சீரடி சிந்துமுச் சீரடிநாலொருசீர றை தருகாலை யளவொடு நேரடி யையொருசீர், நிறைதரு பாத நெடிலடியா நெடுமென் பணைத்தோட், கறைகெழு வெற்க ணல்லாய் மிக்க பாதங் கழிநெடிலே." இவைமேற்கோள். எ-று. (10) | ............................ | தொடையிலக்கணம் வருமாறு:- | Rhyme. | 212. | தொடையென்ப தீரடி தொடுப்ப தாமவை யடைமுதன் மோனை யந்த மியைபே யிடையே யெதுகை யெதிர்மொழி முரணள பெடையே யளபா மெனவை வகையே. | | (இ-ள்.) நிறுத்த முறையானே தொடையுந் தொடைவிகற்பமு மாமா றுணர்த்துதும். மேற்கூறிய பலவகையடிக டம்முள் ளிரண்டா யிணைந்து தொடுப்பது தொடையெனப்படும். இவையே மோனைத்தொடையும் - இயைபுத் தொடையும் - எதுகைத்தொடையும் - முரண்தொடையும் - அளபுத்தொடையும் - என வைவகைப் படும். இவற்றுண் முதலெழுத்மோனைத்தொடை. |
|
|