156தொன்னூல்விளக்கம்
இஃதிடை யிரண்டடி யொழிந்தவேனை யிரண்டடியு மோரெதுகை. - "தவலருந்
தொல்கேள்வித் தன்மை யுடையா, ரிகலில ரெஃகுடையார் தம்முட் - குழீஇ, நகலி
னினிதாயிற் காண்பா மகல்வானத், தும்ப ருறைவார் பதி." இஃதீற்றடியு முதலடியு
மொழிந்தவேனை யிரண்டடியுமோ ரெதுகை. - "ஒருநன்றி செய்தவர்க் கொன்றியெழுந்த,
பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் - கயவர்க், கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீதாயி,
னெழுநூறுந் தீதாய் விடும்." இஃது முதலாமடி யொழிந்தவேனை மூன்றடியுமோ ரெதுகை.
- "கொன்னே கழிந்தன் றிளைமையு மின்னே, பிணியொடு மூப்பு வருமாற் -
றுணிவொன்றி, யென்னொடு சூழாதெழுநெஞ்சே பாதியே, நன்னெறிசேர நமக்கு."
இஃதிரண்டாமடி யொழிந்தவேனை மூன்றடியுமோ ரெதுகை. - "மாக்கேழ் மடநல்லா
யென்றரற்றுஞ் சான்றவர், நோக்கார்கொ னொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோ,
ரீச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்." இஃது
மூன்றாமடி யொழிந்தவேனை மூன்றடியுமோ ரெதுகை. "எறிநீர்ப் பெருங்
கடலெய்தியிருந்து, மறுநீர்சிறுகிணற் றுறல்பார்த்துண்பர், மறுமையறியாதா ராக்கத்திற்
சான்றோர், கழிநல் குரவே தலை." இஃதுநான்காமடி யொழிந்த வேனை மூன்றடியுமோ
ரெதுகை. என்றா ரொருசாரார், பரி, திரு, இரை, இரவு, எதுகையாம். இரீ, இரா,
வெதுகையாகா. எ-று. (13)
 
215. தலையா கெதுகை தலைச்சீர் முழுதுற
லிடைகடை யவ்வவ் வெழுத்தொன் றுவதே.
 
     (இ-ள்.) இதுவுமது. முதலெழுத் தொன்றல்லாது முதற்சீரெ ழுத் தெல்லாந் தாமே
மீண்டு வருவது தலையாகெதுகை யெனப்படும். அங்ஙனங் கருவி யென்றதற்கு மருவி,
அருவி, உருவி, குருவி. என வந்தொருசீர் முழு தொன்றுவ தரிதாயினும் புகழப்படுஞ்
சிறப்புடைய தலையாகெதுகையாம். (வ-று.) குறள் - "சிற்றின்பம் வெஃகியற னல்ல
செய்யாரே, மற்றின்பம் வேண்டுபவர்." - கலித்துறை. - "கரோருகம் போல்வளரென்
பாவந் தீர்க்க வின்மதிபூண், சரோருகமென் சேவடிகண் டணியெனோ தாரகை சூழ்,
சிரோருகம் பூப்பப் புணர்பவத் தென்றுஞ் செழுங்கருணை, யுரோருகமாக விளைகாவலூ
ரமலோற் பவியே." - விருத்தம். - "துறவினா லுடலி னாக்கை துறந்ததோ ருயிர்க
ளொப்பா, ருறவினா லன்பின் மிக்கோ ருயிர்க்கெலா முடல்க ளொப்பா, ரறவினா
லெழீஇய தன்மைத் தருண்மலி யமர ரொப்பார், நறவினா லலர்ந்த கானுநலத் தில்வா
னுலகொப் பாமே." என்பன பிறவு முதலொருசீர் முழுதொன்றித் தொடுத்த
தலையாகெதுகை வந்தவாறு காண்க. மீளவும் பலசீரொன்றித் தொடுத்துவரி னதின்மிக்க
சிறப்பெனக் கொள்க. (வ-று.) வெண்பா. - நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடிய தன்,
றாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான், முன்னப் புட் டோன்று
முளரித் தலைவைகு, மன்னப்புட் டோன்று மருகு." என