16தொன்னூல்விளக்கம்
மிகலுமாம். இம்மூவிகார மன்றியுஞ் சிலமுறை இருபத மொருப தமாகத் திரண்டு
கலப்புழிச் சிலவெழுத்து அவ்வழி விகாரப்படு மெனக்கொள்க. இவற்றுள், திரிதல் =
ஆதேசம், எ-ம். கெடுதல் = உலோபம், எ-ம். மிகுதல் = ஆகமம், எ-ம். கலத்தல் =
சங்கீரணம், எ-ம். வடமொழி யானே வழங்கும். தொகைப்படச் சொன்ன
இந்நாலெழுத்தின் விகாரம் வகைப்பட விளங்குதற் கல்வழிப் பொருளும் வேற்றுமைப்
பொருளும் விளக்கல் வேண்டும், எ-று. (1)
 
22. அல்வழி வேற்றுமை யாமிரண்டவற்றுள்
விரியினு முருபெடா வினைசார் பெயரே
யல்வழிப் பொருட்பெய ராகுமென்ப
வேற்றுரு பில்லது விரிக்குங் காலை
வேற்றுமைக் கொளினது வேற்றுமைப் பொருளே.
 
     (இ-ள்.) அல்வழியும் வேற்றுமையு மாமாறுணர்த்துதும். வினைச்சொற் சார்ந்த
முதற்பெயராகி விரியினும் வேற்றுமை உருபுபெறாதுநிற்கும் பெயரே
அல்வழிப்பொருட்பெயர், எ-ம். முன்னேவேற்றுமை உருபு கொள்ளாதாயினும்
விரிக்குங்காலை வேற்றுமை உருபு கொண்டுவரும் பெயரே வேற்றுமைப்பொருட்பெயர்,
எ-ம். கொள்க. விதியைவிளக்குதும். (உ-ம்) கல்லெடுத்தான், கல்வீடு, கல்லியல்பு
என்பவற்று ளுருபுதோன்றாதாயினும் பொருளைவிரித்தாற் கல்லையெடுத்தான்,
கல்லாலாயவீடு, கல்லினதியல்பென் றவ்வுருபுகூட்ட வேண்டினமையால் இதிலே
கல்லென்னுஞ்சொல் வேற்றுமைப் பொருட் பெயரெனப்படும். அவ்வுருபு தோன்றாமலுங்
கூட்டாமலும் விரித்துரைக்கப்படும் பெயர் அல்வழிப்பொருட் பெயரெனப்படும். (உ-ம்)
கல்சிறிது, கல்லுயர்ந்தது. இதிலே கல் என்னுஞ் சொல் அவ்வுரு பில்லாமையானும்
பொருளை விரிக்க அவ்வுருபு கூட்ட வேண்டாமையானும் அல்வழிப் பொருட்பெய
ரெனப்படும். அன்றியும் (உ-ம்.) பொன்னுடையான், என ஐ உருபு தொக்கியும்;
பொன்னையுடையான், என விரிந்தும்; கல்லெறிந்தான், என ஆல் உருபு தொக்கியும்;
கல்லா லெறிந்தான், என விரிந்தும்; கொற்றன் மகன் என கு உருபு தொக்கியும்,
கொற்றற்கு மகன்என விரிந்தும், மலைவீழருவிஎன இன் உருபு தொக்கியும்; மலையின்
வீழருவிஎன விரிந்தும்; மலையினுச்சி என அது உருபுதொக்கியும்; மலையினது வுச்சி
என விரிந்தும்; மலைமுழை என கண்ணருபுதொக்கியும் மலைக்கண் முழை என
விரிந்தும்; வேற்றுமைப் புணர்ச்சி ஆறும்வந்தன. அன்றியும், (உ-ம்) கொல்யானை என
வினைத்தொகையும், கருங்குதிரை என பண்புத் தொகையும், ஆயன்சாத்தன்,
சாரைப்பாம்பு என இருபேரொட்டுப் பண்புத்தொகையும், பொற்சுணங்கு என
உவமைத்தொகையும், இராப்பகல் என உம்மைத்தொகையும், பொற்றொடி என
அன்மொழித்தொகையும்,