160தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) அந்தாதித்தொடையு மிரட்டைத்தொடையுஞ் செந்தொடையு
மாமாறுணர்த்துதும். மோனைமுத லைந்தொடையுங் கூறிய வடிமுத லெண்வகை
விகற்பத்தோடு கூட்டிக் குனிக்கச்சொன்ன தொடையுந் தொடைவிகற்பமு நாற்பதெனக்
கண்டுணர்க. அவையு மன்றி அந்தாதித்தொடை,இரட்டைத்தொடை,
செந்தொடை,இம்முத்தொடையு முளவெனக் கொள்க. இவற்றுள் அடிதோறு
மிறுதிக்கணின்ற எழுத்தானு மசையானுஞ் சீரானு மடியானு மற்றையடிக் காதியாகத்
தொடுப்பது அந்தாதித்தொடை யெனப்படும். (வ-று.) "உலகுடன்விளக்கு
மொளிகிளரவிர்மதி,மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை,முக்குடை நீழற் பொற்புடை
யாசன,மாசனத் திருந்ததிருந்தொளி யறிவனை, யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து,
துன்னிய மாந்தரெனப்,பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே." எனவெ ழுத்தான
மசையானுஞ் சீரானு மடிதோறு மந்தாதித்தொடை வந்தவாறு காண்க. அன்றியும்,
அளவடிக்கண்ணே யோரடிமுழுது மொருசொல்லே வரத்தொடுப்ப திரட்டைத்தொடை
யெனப்படும். இதனு ளீற்றெழுத் தொன்று குறையினு மிழுக்கா. (வ-று.) "ஒக்குமே
யொக்குமே யொக்குமே யொக்கும், விளக்கினுட் சீறெரி யொக்குமே, யொக்குங்,
குளக்கோட்டிப் பூவினிறம்." என முதலடி யிரட்டைத்தொடையாக வந்தவாறுகாண்க.
அன்றியு மோனைமுதலாகிய தொடையுந் தொடைவிகற்பமு மின்றி வேறுபடத்
தொடுப்பது செந்தொடை யெனப்படும். இதனுண் முதலசையானு முதற் சீரானு
மடிதோறும் வேறுபடத் தொடுத்தமையிற் சிறப்புடைச் செந்தொடையா மெனக் கொள்க.
(வ-று.) அகவல். - "பூத்த சல்லகி வியன்சினைக் காவின் மிகுதிருக் காவலூ ரகத்தின்
பெழுந்தாளும் வான்மதி யாளே." எனத் தொடை விகற்ப மின்றி யசையுஞ் சீருந்
தம்முண் மறுதலைப் படத் தொடுத்தமையாற் சிறப்புடைச் செந்தொடை வந்தவாறு
காண்க. - யாப்பருங்கலம். - "செந்தொடை யிரட்டையோ டந்தாதி யெனவும், வந்த
வகையான் வழங்குமன் பெயரே. - ஈறுமுதலாத் தொடுப்ப தந்தா தியென், றோதினர்
மாதோ வுணர்ந்திசி னோரே. - இரட்டை யடிமுழு தொருசீ ரியற்றே. - செந்தொடை
யொவ்வாத் திறத்தன வாகும்." - காரிகை. - "அந்த முதலாய்த் தொடுப்ப தந்தாதி யடி
முழுதும், வந்த மொழியே வருவ திரட்டை வரன் முறை யான், முந்திய மோனை
முதலா முழுது மொவ்வாது விட்டாற், செந்தொடை நாமம்பெறு நறுமென் குழற்றே
மொழியே." இவை மேற்கோள். எ-று. (16)
 
218. அடியினைப் பொழிப்பொரூஉக் கூழை மேற்கீழ்க்
கதுவாய் முற்றென வெட்டொடு மோனை
யியைபே யெதுகை முரணே யளபே
யெனவைந் துறழ வெண்ணைந் தாகி
யடியந் தாதி யிரட்டைச் செந்தொடை