ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை, ஆசிரியவிருத்தம், எ-ம். கலிப்பா, கலித்துறை, கலித்தாழிசை, கலிவிருத்தம், எ-ம். வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சித்தாழிசை, வஞ்சிவிருத்தம், எ-ம். மருட்பாவோடு பதினேழாம். இவ்வகைச் செய்யு ளெல்லா மிவ்வோத்தின் கண்ணே விளங்குவ தாகையி லிவ்வோத்துச் செய்யு ளியலெனும் பெயர்த்தெனக் கொள்க. - யாப்பருங்கலம். - "செய்யுட் டாமே மெய்ப்பெற விரிப்பிற், பாவே பாவின மென விரண்டாகும். - வெண்பா வாசிரியங் கலிவஞ்சி, பண்பாய்ந் துரைத்த பாநான் கும்மே. - தாழிசை துறையே விருத்த மென்றிவை, பாவினம் பாவொடு பாற்பட் டியலும்." இவை மேற்கோள். எ-று. (1) | ........................ | வெண்பாவிலக்கணம் வருமாறு:- | Venba. | 220. | வெள்ளைக் கியற்சீர் வெண்சீர் விரவி யேற்கு மளவடி யீற்றடி சிந்தடி யீற்றுச்சீ ரசைச்சீ ருக்குறண் மிகலுமாம். | | (இ-ள்.) நிறுத்த முறையானே வெண்பா வியல்பும் விகற்பமு மாமாறுணர்த்துதும். வெண்பா விடத்துத் தனக்குரிச்சீராகிய நேரீற்ற மூவசைச்சீரும் வெண்சீருமன்றி யீரசைச்சீராகிய வியற்சீரும் வரப்பெறும். அன்றியும், வெண்பாவெல்லா மளவடியானே நடக்குமாயினு மீற்றடி சிந்தடியாக வரும். இதனீற்றுச் சீர்நாண் மலரெனு மோரசைச் சீராம். ஆயினுமிவ் வோரசைக்குக் குற்றயிலுகரங் கூட்டிக் காசு பிறப்பென வெண்பாவிற் கீற்றுச் சீராகவும் பெறுமே. (வ-று.) குறள். - "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற், கொல்லப் பயன்படுங் கீழ். எ-ம். எனப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை, வீயாது பின்சென் றடும். எ.ம். அறங்கெட வெஞ் ஞான்றுஞ் செய்யற்க செய்யிற் றிறங்கெடச் சாதலிற்றீது. எ-ம். சுறுவரை யே யாயினுஞ் செய்த நன்றல்ல, துறுபயனில்லை யுயிர்க்கு. எனவு மிவை யலகிடுங்கால் வெண்சீரியற்சீர் விரவிமுதற்கண் ணளவடியாகவு மீற்றின் கண் சிந்தடியாகவு மீற்றுச்சீர் முறையே-நாள்-மலர்-காசு-பிறப்பு- என நான்கும் வந்தவாறு காண்க. அன்றியு மொரேவிடத்திலக்கிய வழியான் முற்றியலுகரங் காசு பிறப்பென்னு மீற்றுச்சீராக வரப்பெறும். (வ-று.) "எவ்வ துறைவ துலக முலகத்தோ, டவ்வ துறைவ தறிவு." என விது முற்றிய லுகரத்தோடு வந்த பிறப்பு என்னும் வாய்பாடு. பிறவுமன்ன. - யாப்பருங்கலம். - "செப்ப லிசையன வெண்பா மற்றவை, யந்தடி சிந்தடி யாகலு மவ்வடி, யந்த மசைச்சீ ராகவும் பெறுமே." எ-று. (2) | 221. | வெள்ளையுட் பிறதளை விரவா வெண்டளை யொன்றாய்ச் செப்ப லோசை யாமஃதே | | |
|
|