| யேந்திசை வெண்சீ ரியற்சீர் தூங்கிசை யொழுகிசை யிரண்டு முளவெனி லாகும். | | (இ-ள்.) வெண்பா வோசையின் விகற்ப முணர்த்துதும். வெண்பா விற்கெல்லா மாமுன் நிரையும் விளமுன் நேருங் காய்முன் நேரும் வந்து தனக்குரிய வெண்டளையன்றிப் பிறதளைவாரா. அங்ஙனம் வெண்டளையால் வருமோசை செப்பலோசை யெனப்படு மாயினும் இவை மூவகைய வாகும். வெண்சீர் வெண்டளைவருவ தேந்திசைச் செப்ப லெனவும், இயற்சீர் வெண்டளைவருவது தூங்கிசைச் செப்ப லெனவும், வெண்சீரு மியற்சீரும் விரவி வெண்டளை வருவ தொழுகிசைச் செப்ப லெனவுங் கொள்க. (வ-று.) "தீயவை மூன்றான் பிறர்க்குச் செய்யற்க தன்னுயிர்க்கே, நோயவைபின்றான் வேண்டாதான்." என்ப தேந்திசைச் செப்பலோசை. - "பகையவர்க் கன்பினைக் காட்டலிற் பார்மேற், றகையவை யெங்கு மில." எ-து. தூங்கிசைச் செப்பலோசை. - "அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது, பொன்றுங்காற் பொன்றாத் துணை." என்ப தொழுகிசைச் செப்பலோசை. பிறவுமன்ன. (3) | 222. | குறள்சிந் தின்னிசை நேரிசை சவலை பஃறொடை யெனவெண் பாவா றவற்று ளீரடி குறளே யிருகுறள் சவலை யிருகுற ளிடைக்கூ னியைநே ரிசையே நாலடி விகற்ப நடையின் னிசையே நேரிசை யின்னிசை நேர்மூ வடிசிந்தே நாலடி மிக்கடி நண்ணிற் பஃறொடை யெனவறு வெண்பா வேற்கு நடையே. | | (இ-ள்.) வெண்பா விகற்ப மாமாறுணர்த்துதும். அவையே, குறள்வெண்பாவும், சிந்தியல்வெண்பாவும், இன்னிசைவெண்பாவும், நேரிசைவெண்பாவும், வலைவெண்பாவும், பஃறொடைவெண்பாவும், எனவறுவகைப்படும். இவற்றுட் குறள்வெண்பா. - நாற்சீர் முச்சீரென விரண்டடி யொருவிகற்பத்தானு மிருவிகற்பத்தானும் வரப் பெறும். முச்சீர் வருவனவு முளவெனக் கொள்க. மேலேகாட்டிய வுதாரணங்களைக் கண்டுகொள்க. அன்றியும் இரு குறளொரு விகற்பத்தான் வருவது சவலை வெண்பா வெனப்படும். - "நனி யிரு குறளாம் நான்கடி யுடைத்தாய்த் தனிநிலை யில்லது சவலை வெண்பாட் டே." என்றா ரொருசா ராசிரியர். (வ-று.) "அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல, நட்டாலு நண்பல்லார் நண்பல்ல, கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்களே சங்கு, சுட்டாலும் வெண்மை தரும்." என விது மூதுரைக் கண் வந்தமையான் மூதுரைவெண்பா வென்பாரு முளரெனக் கொள்க. அன்றியும் இருகுறள் வந்து நடுவே முதற் றொடைக் கேற்றத் தனிச்சொற் |
|
|