168தொன்னூல்விளக்கம்
  யொத்தாழிசை மூன்று மோரைங் கொச்சகம்
வெண்கலி கலிவெண்பா விகற்பமீ ரைந்தே.
 
     (இ-ள்.) கலிப்பா வியல்பும் விகற்பமு மாமாறுணர்த்துதும். கலிப் பாவோசை
துள்ளலோசை யெனப்படும். கலிப்பாவிற் கெல்லாச் சீரும் விரவி வரினு நிரையீற்
றியற்சீரு நேரிடை வஞ்சிச்சீரும் வெண்சீரு மேற்பன. இவற்றுண் ணிரைமுதல் வரும்
வெண்சீரு மிகுமெனக் கொள்க. மீளவுந் தன்றளை யன்றிப் பிறதளை வரவும் பெறுமே.
அன்றியுங் கலிப்பா வெல்லா நாற்சீரான்வரு மளவடியா னடக்குமென் றுணர்க. அன்றியு
மொத்தாழிசைக் கலிப்பா மூன்றுங் கொச்சக மைந்தும் வெண்கலிப்பா வொன்றுங்
கலிவெண்பா வொன்றுமாகக் கலிப்பா விகற்பம் பத்தெனக்கொள்க. இவற்றிற் கெல்லாந்
தனித்தனிச் சூத்திரம் வாராமுன்ன ரவற்றிற்கு வேண்டிய வுறுப் பிவை யெனக்
காட்டுதும். - யாப்பருங் கலம். - "துள்ள லிசையன கலியே மற்றவை, வெள்ளையு
மகவலு மாய்விளைந் திறுமே." இது மேற்கோள். எ-று. (9)
 
228. கலிமுக லுறுப்பாந் தரவுதா ழிசையே
துணையுறுப் பெனக்கூன் சுரிதகம் வண்ணக
மம்போ தரங்க மாமிவை நான்கே.
 
     (இ-ள்.) கலிப்பா வுறுப்பிவையென வுணர்த்துதும். ஆகையின் முதலுறுப்பெனவுந்
துணையுறுப் பெனவுங் கலிப்பாவுறுப் பிருவகைப் படும். இவற்றுட் டரவுந் தாழிசையு
மெனவிரண்டு முதலுறுப்பாம். கலிப்பாதலை யில்வருதலாற் றரவெனும் பெயர்த்து.
என்னை. தரவெனினு மெருத்தமெனினு மொக்கும். அங்ஙனந் தரவின்கீழே தாழ்ந்திசைப்
படுதலாற் றாழிசை யென்னும் பெயர்த்து. அன்றியுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமும்
வண்ணகமு மம்போதரங்கமு மெனத் துணையுறுப் பொருநான் கென்ப. இவற்றுட்
கூனெனினுந் தனிச்சொல் லெனினு மொக்கும். இவை யெல்லாவற்றையு மினி விளக்குதும்.
எ-று. (10)
 
229. தரவு தாழிசை தன்றளை வெண்டளை
யிரண்டுறழ்ந் தளவடி யிரண்டும் பலவுமாம்.
 
     (இ-ள்.) தரவு தாழிசை யாமாறுணர்த்துதும். தரவுந் தாழிசையுங் கலித்தளை
வெண்டளை யெனவிரண்டும் விரவி யளவடியா யடி யிரண்டும் பலவுமாக நடக்கும்.
இவற்றிற் குதாரண மினிக் காட்டுதும். (11)
 
230. வண்ணக மளவடி வரைமுதற் பலவடி
நான்காதி யெட்டீறாய் நடைமுடு கராகமாம்.
 
     (இ-ள்.) வண்ணக மாமாறுணர்த்துதும். வண்ணக மெனினு முடுகிய லெனினு மராக