171செய்யுளியல்
மிருமறை யருளினை." இது அராகமாகையின் மேல்வந்த வுறுப்புக்களன்றித் தாழிசைக்கு
மம்போ தரங்கத் திற்குநடுவே யிவை யிசைப்புழி வண்ணக வொத்தாழிசையா
மெனக்கொள்க. ஆகையின் முறையே யொத்தாழிசைக் கலிப்பா விகற்ப மூன்றும்
வந்தவாறு காண்க. - யாப்பருங்கலம். - "நேரிசை யம்போ தரங்கம் வண்ணமென்,
றோதிய மூன்றே யொத்தா ழிசைக்கலி. - தரவொன்று தாழிசை மூன்றுஞ் சமனாய்த்,
தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச், சுரிதகஞ் சொன்ன விரண்டினு ளொன்றாய்,
நிகழ்வது நேரிசை யொத்தா ழிசையே. - முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை,
யொன்றினுக் கொன்று சுருங்கு முறுப்பின, தம்போ தரங்க வொத்தா ழிசைக்கலியே. -
அவற்றொடு முடுகிய லடியுடை யராக மடுப் பது வண்ணக வொத்தா ழிசையே." இவை
மேற்கோள். எ-று. (15)
 
234. கொச்சகக் கலியைங் கூறு பாடெனத்
தரவே தரவிணை தாழிசை சிலபல
சிலபிறழ்ந் துறழ்ந்துஞ் சிலமயங் கியுமாம்.
 
     (இ-ள்.) கொச்சகக் கலிப்பா விகற்ப முணர்த்துதும். அவையே தரவுக் கொச்சகக்
கலிப்பா, எ-ம். தரவிணைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா,
எ-ம். பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம்.
கொச்சகக் கலிப்பா விகற்ப மைந்தெனக் கொள்க.
 
     இவற்றுள், தரவுக் கொச்சகக் கலிப்பா வருமாறு- நான்கடி தரவு தனிச்சொற் சுரிதக
மென விம்மூன் றுறுப்பாக வருவன தரவு கொச்சகக் கலிப்பா வெனப் படும். இதுவே
தனிச்சொற் சுரிதக மின்றியும் வருமெனக் கொள்க. (வ-று.) "செல்வப் போர்க்கதக்
கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாளி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை
முருக்கிப்போ, யெல்லைநீர் வியங்கோண்மு விடைநுழையு மதியம்போன், மல்லலோங்
கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே." எனக் கலித்தளையாய் நான்கடித்தரவு தனிச்
சொற் சுரிதகமின்றி வந்தவாறு காண்க.
 
     அன்றியும், தரவிணைக் கொச்சகக் கலிப்பா வருமாறு:- தரவு தனிச் சொற்றரவு
தனிச்சொற் சுரிதகமாக வருவன தரவிணைக் கொச்சகக் கலிப்பா வெனப் படும். (வ-று.)
"வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய, கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங்
காவலனாங், கொடிபடுவரை மார்பிற் கூடலாற் கோமானே." தரவு. எனவாங்கு -
தனிச்சொல். "துணைவளைத் தோளிவன் மெலியத் தொன்னலந் தொடர்புண்டாங்,
கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற் கோர்மா றென்று, துணைமலர் தடங்கண்
ணார்துணை யாகக் கருதாரே." தரவு. அதனால் - தனிச்சொல். "செவ்வாப் பேதை யிவ
டிறத், தெவ்வா றாங்கொ, லிஃதெண்ணிய வாறே." இஃதுஇடை யிடை யே தனிச்சொற்
பெற்றாசிரியச் சுரிதகத்தான் முடிந்த தென்றறிக.