174தொன்னூல்விளக்கம்
புகைபரந்தது மெய்பொறையாகிற் றுயிர்." இவையிருசீரோரடி யெட் டம்போதரங்கம்.
அதனால் - தனிச்சொல். "இனையது நினையா லனையது பொழுதா, னினையல வாழி
தோழி துலையாப், பனியொடு கழிகவுண் கண்ணொடு கழிகவித் துன்னிய நோயே."
இதுசுரிதகம். தர விரண்டுந் தாழிசையாறுந் தனிச்சொல்லு மராகமு மீண்டுதாழிசையாறு
மம்போதரங்கமுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் வந்ததென் றறிக. இது மேற்கூறிய
வாறுறுப்பிற் சிற்சிலபிறழ்ந்து முறழ்ந்துங் குறைந்து மிக்கு மயங்கிவருவ தாகையின்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வென்னும் பெயர்த்து. மீண் டிதையொரு போ கென்மரு
முளரே. எனவு மிதுவே கலம்பக முதலுறுப்பாக வரப்பெறு மெனவுங் கொள்க. -
யாப்பருங்கலம். - "தரவே தரவிணைத் தாழிசை தாமுஞ், சிலவும் பலவுஞ் சிறந்து
மயங்கியு, மற்றும் விகற்பம் பலவாய்வருநவுங், கொச்சக மென்னுங் குறியின வாகும்."
இது மேற்கோள். எ-று. (16)
 
235. வெண்கலிக் களவடி பலதளை பலதொடை
மண்டியீற் றசைச்சீர் வந்துசிந் தடியாங்
கலிவெண் பாவெண் கலியென நடப்பினும்
வலிவெண் டளைதவா வரவும் பலதொடை
நேரிசை வெண்பா நேரவும் பெறுமே.
 
     (இ-ள்.) வெண்கலிப்பாவுங் கலிவெண்பாவு மாமாறுணர்த்துதும். ஆகையிற்
கலித்தளை வெண்டளை யொரோவிடத்துப் பிறதளையாகவும், அளவடி யிரண்டுமோ
ரெதுகையால் வந்தொரு விகற்பமாய்ப் பலதொடையாகவு, மீற்றடிசிந்தடியாகி நாண் -
மலர் - காசு - பிறப்பென வோரசைச்சீரான் வெண்பாப்போல முடிந்தன வாகவும்,
வருவன வெண்கலிப்பா வெனப்படும். (வ-று.) "சென்னாக நீர்பொழிய செல்வநிலைக்
கறமுமிகப், பொன்னாக நகர்புரையப் புவனமெலாம் புரந்தாண்டே. - கருமேவும்
வளைதவழுங் கமழ்வயற் பாய்பூந் தடஞ்சூழ், மருமேவு நிழற்சோலை மயின்மேவிக்
களித்தாடக், கரும்பொப்பச் செஞ்சாலி காய்த்தலர்கைக் கடைசியரே, சுரும்பொப்பச்
சூழிரப்போர் துதித்துவப்ப வியந்தீந்து. - மாலைதாழ் குழலசைய மணக்குரவை
யொலித்தாட, வாலைதாழ் புனலொழுகி யலர்வனமுங் கனி பொழிலு, மல்கிவளர்
சிறப்போங்க வரையாச்சீர் மனம்வெறுப்ப, நல்கிவள ரீத்தல நன் னாடு." என
வைந்தொடையோடு கலித்தளை வெண்டளை விரவி மற்றடி யளவடி யீற்றடிசிந்தடியாக
வெண்பாப்போலக் காசெனு மசைச்சீ ரான் வந்த வெண்கலிப்பா வெனக் காண்க.
அன்றியுங் கலிவெண்பாவும் வெண்டளையன்றிப் பிறதளை விரவாவென்ற
வேற்றுமையல்லது வெண்கலிப்போல நடக்குமென் றுணர்க. ஆயினு நேரிசை
வெண்பாப்போல நாற் சீர்முச்சீர் தனிச்சொல் லெனமூன் றொருவிகற்பமாக வந்து
பலதொடை யிவ்வாறொன்றித் தொடர்ந்து முச்சீரீற்றடி நாண் - மலர் - காசு -
பிறப்பென வோரசைச் சீரானு முடிந்து வருவத சிறப்பெனக் கொள்க. உலா மடல்