175செய்யுளியல்
முதலியு விந்நடை யுடையன வெனக்கண் டுணர்க. (வ-று.) - ``தீயோருரை கேளான்
றீயோர்வழி செல்லான், றீயோர்முறை யோதான் செவ்வோனே - தூயமறைச்,
சொல்லொன்றே தேடகத்தான் சோரா திராப்பகலச், சொல்லொன்றே சூழுணர்வான்
சொல்வோனே - யொல்லெனப்பாய், நீர்முகத்துப் பொய்யா நிறைகனிகொய்
கொம்பொப்பான், கார்முகத்துப் பாசிலையுங் காய்ந்துதிரா - சீர்முகத்து, மாசில்லோர்க்
கெல்லா மயக்கமற வாழ்வாமே, யாசுள்ளோர்க் கப்படியோ வல்லவல்ல - வேசுபெறக்,
காமமுதற் பற்றுதலாற் கால் சுழற்றுந் தூசியெனா, நாமமுத லற்றழிவார் நச்சறிவார் -
வீமமிகத், தீர்வை யிடுநாளிற் சிதைந்தேங்கி நல்லவருட், சோர்வையுறத் தாம்பிரிந்து
சூழ்ந்து ளைவார் - போர்வையில, தூயோர் நெறியறிவான் சூழாள்வான் கேடுகுக்குந்,
தீயோர் நெறியறிவான் சேர்ந்து.ழுழு எனப் பலதொடையாய் நேரிசைவெண்பாப்போல
வந்தகலிவெண்பா வெனக்காண்க. எ-று. (17)
 
236. கட்டளைக் கலிப்பாக் காட்டுங் காலை
யொருமாக் கூவிள மொருமூன் றியைய
நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய்
நடந்தடிப் பாதியாய் நான்கடி யொத்தவாய்
வருவ தின்று வழங்கு நெறியே.
 
     (இ-ள்.) கட்டளைக்கலிப்பா வாமாறுணர்த்துதும். இன்றைப் புலவர்மற்
றொருவகைக் கலிப்பாவை விதித்துக் கட்டளைக்கலிப்பாவென்றுவழங்குவர்.
அதுவேயிரட்டையடியா யொவ்வொருபாதிசீர் வகையாற் றேமாவாயினும், புளிமா
வாயினும், வந்து மூன்று கூவிளங்கூட்டி நாற்சீராகவு மெழுத்து வகையா
னொவ்வொருபாதி நேரசைமுதலாயிற் பதினொன்றெழுத்தாகவும், நிரையசை முதலாயிற்
பன்னீ ரெழுத்தாகவும், வருமென் றுணர்க. இவற்றிற் கெல்லாஞ் சூத்திரமாகவு
முதாரணமாகவும் வருமிக் கட்டளைக் கலிப்பாக் காண்க. (வ-று.) - ``இட்டசீர் வகையா
னொருமாவின் கீழியை முக்கூவிள மோரடிப் பாதியாய், நெட்டடிக் கெழுத்தெண்ணின
தன்மையா னிரைபன்னீ ரெழுத்தாய்ப் பதினொன்றுநேர், நட்டிரட்டி னஃதோ ரடியாக
விந்நடைய நான்கடி யொப்ப நடந்தபாக், கட்டளைக் கலிப்பா வெனவின்று நற்கலை
வல்லோ ருணர்ந்தோதின ரென்பவே.ழுழு என்ப திலக்கணமு முதாரணமும் வந்தவாறு
காண்க. எ-று. (18)

.......................

வஞ்சிப்பாவிலக்கணம் வருமாறு:-

Vanjippa.


237.

வஞ்சிக் கோசை வழங்குந் தூங்கலே
தன்சீர் தன்றளை தவிர்ந்து பிறபெறுங்
குறளடி சிந்தடி கொண்டு மூவடி