நாற்சீரானும் வந்தமையாற் கடைகுறை குறட்டாழிசை யாயிற்று. அன்றியுஞ் செந்துறைபோல வளவடி யிரண்டு மளவிலொ த்துச் சீர்வகையானே தம்முளொவ்வா தொழுகிய வோசையின்றி வருவன செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறளெனப்படும். (வ-று.) "கொடிநித்த மலரொப்பார் தாயே கூன்மதியேற், றடியை யேத்தா தன்புணரா தாரே." என வரும். அன்றியுங் குறள்வெண்பாப் போலவந்து பிறதளை விரவிவருவன குறட்டாழிசை யெனப்படும். (வ-று.) "விண்ணாரு மொளிமதியே வீழ்ந்தேத்து மடியை, நண்ணாரை நண்ணா நயன்." என வரும். அன்றியும். (வ-று.) "நண்ணுவார் வினைநைய நாடோறு நற்றவர்க் கரசாய ஞானநற், கண்ணினா னடியே யடைவார்கள் கற்றவரே." எ-ம். "அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவந்தி, மறுவ வறுபத்தினி போல வையீரே." எ-ம். "வண்டார் பூங்கோதை வரிவளைக்கைத் திருநுதலாள், பண்டைய லல்லல் படி." எ-ம். அன்றியு மற்றை வெண்பா வினமாய் வருந்தாழிசை வெண்டாழிசை, எ-ம். வெள்ளைத்தாழிசை, எ-ம். வழங்கும். இவையே யின்னிசைச் சிந்தியல் வெண்பாப்போல நாற்சீர் நாற்சீர் முச்சீரென மூவடி யான் வந்து வெண்டளை சிதைந்து பிறதளைதட்டு வருவன வெண்டாழிசை யெனப்படும். "அடியொரு மூன்றும் வந்தந்தடி சிந்தாய், விடினது வெள்ளைத் தாழிசை யாகும்." என்பதியாப்பருங்கலம். (வ-று.) "நண்பி தென்று தீய சொல்லார், முன்பு நின்று முனிவு செய்யா, ரன்பு வேண்டுபவர்." இது மூன்றடியால் வந்த வெண்டாழிசை. - "அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே, கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொ லியாம், வம்பே பிறந்து விடல்." "வாணேருண் கண்ணார்க் கழிந்தமடநெஞ்சே, நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம், வீணேபிறந்துவிடல்." "கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே, யாளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொ லியாம், வாளா பிறந்து விடல்." இது சிந்தியல் வெண்பாவொ ருபொருண்மேன் மூன்றடுக்கிவந்த வெள்ளைத்தாழிசை. எ-று. (25) | 244. | அகவற் றாழிசை யடிமூன் றொத்தவா யடுக்கிய மூன்றுமொன் றாகியும் வருமே. | | (இ-ள்.) ஆசிரியத் தாழிசை யாமாறுணர்த்துதும். எவ்வகைச் சீரானும் எவ்வகை யடியானு மொத்த மூவடியாக வொருபொருண்மேன் மூன்றடுக்கி வருவன வாசிரியத் தாழிசை யெனப் படும். (வ-று.) "பருதி யுடையாக வினிதுடுத்த நாயகி, மருவி நம்மே லிரங்குவளே லவள்வாயி, லிருதியந் தீங்குரல் கேளாமோ வென்னெஞ்சே. - வேய்ந்த முடியாக மீன்புனைந்த நாயகி, வாய்ந்து நம்மே லிரங்குவளே லவள்வாயி, லாய்ந்த வந்தீங்குரல் கேளாமோ வென்னெஞ்சே. - திங்க ளணியாகச் சேர்த்திய தாணாயகி, யிங்கணம் மேலிரங்குவளே லவள்வாயின, மங்களந் தீங்குரல் கேளாமோ வென்னெஞ்சே." - என விவை மூன்று மொரு பொருண்மே லடுக்கி |
|
|