182தொன்னூல்விளக்கம்
வந்த வாசிரியத் தாழிசை. ஒரோ விடத்திவ்வா றொத்த மூவடியா னொரு செய்யுளாக
நின்று மாசிரியத் தாழிசை யாகும். (வ-று.) "மீனுடை முடியினை வெண்மதி யடியினை,
பானுடை வடிவினை பாரொருங் கோம்பினை, வானுடை யரசிநின் மலரடி தொழுதனம்."
எ-ம். வரும். அன்றியும், (வ-று.) "சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறு, மத்தமு மாகலி
னனந்தன் கண்களே, யுத்தம னைந்தெழுத் துருவங் காண்பன." இது தனித்துவந்த
வாசிரியத் தாழிசை. - "கன்று குணிலாக் கனியுகுத்த மாயவ, னின்று நம்மானுள் வருமே
லவன்வாயிற், கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி, பாம்பு கயிறாக் கடல்கடைந்த
மாயவ, னீங்கு நம்மானுள் வருமே லவன்வாயி, லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி,
கொல்லை யஞ்சாரற் குருந்தொசித்த மாயவ, னெல்லி நம்மானுள் வருமே லவன்வாயின்,
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி." இது ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வந்த
வாசிரியத் தாழிசை. "மூவடி யொத்துமூன் றடுக்கியுந் தனியொன், றாகியு மகவற் றாழிசை
யாகும்." என்பதியாப்பருங் கலம். எ-று. (16)
 
245. கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்
றடியெனைத் தாகியு மளவொத் தொவ்வா
தொருமூன் றடுக்கியு மொன்றுமாய் வருமே.
 
     (இ-ள்.) கலித்தாழிசை யாமாறுணர்த்துதும். ஈரடி முதலாய்ப் பல வடியானும்
வந்தீற்றடி சீரான்மிக்கு மற்றடி யளவொத்து மொவ்வாதும் வருவன கலித்தாழிசை
யெனப்படும். இவையு மொரு பொருண்மேன் மூன் றடுக்கிவரிற் சிறப்பாகித் தனியே
யொன்றாய் வரவும் பெறுமே. (வ-று.) "தாயடியே திங்கண்மேற் சாய்வது கண்டேன்,
றீயடியாட் கினியாமோ தீர்ந்ததென் றுன்பங்கா ணெஞ்சே. - பூண்பிறைமேற் கஞ்சத்தாள்
பூப்பது கண்டேன், சேண்பிறைபோன் மலரேனோ தீர்ந்ததென் றுன்ப ங்கா ணெஞ்சே. -
மதிசேர்ந்த தாட்சேர்ந்து மாலையிற் கொண்டேன், றிதி சேர்ந்து வாழேனோ தீர்ந்ததென்
றுன்பங்கா ணெஞ்சே." எனவீரடியா யீற்றடிநீண்டு மூன்றடுக்கிவந்த கலித்தாழிசை.
அன்றியும், - "மூவாசை தவச் சிறையின் முற்றடுக்கியே திரிலவுட், டேவாசை யாளுந்
திருவணங்கே. - தேவாசை யாளுந் திருவணங்கைச் சேர்ந்தக்கான், மேவாசை யாறுமம்
மெல்லடி யேத்தவே றேத்தவே." என விரண்டாமடி குறைந்து முதலடியு மூன்றா மடியு
மொத்துவந் தீற்றடி நீண்டு தனியே வந்த கலித்தாழிசை. அன்றியும், (வ-று.) "இருகூற்
றுருவத் திருந்தண் பொழிற்றில்லை, யொரு கூற்றின் கூத்தை யுணராய் மடநெஞ்சே,
யொருகூற்றின் கூத்தை யுணரா யெனின் மற்றப், பொருகூற்றந் தோற்றப் புலம்பேல்
வாழிமட நெஞ்சே." இது ஈற்றடி மிகுந்து தனித்து வந்த நான்கடிக் கலித்தாழிசை. -
"பூண்ட பறையறையப் பூத மருள, நீண்ட சடையா னாடுமே, நீண்ட சடையானாடு