மென்ப, மாண்ட சாயன், மலைமகள் காணவே காணவே." எனச் சிறு பான்மையேனையடிக ளொவ்வாது வருதலு முண்டு. - "செல்லார் பொழிற் றில்லைச் சிற்றம்பலத் தெங்கள், பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள், முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான, புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள், ஆங்கற்பகக் கன்றளித் தருளுந் தில்லை வனப், பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்." இது ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி யீற்றடி மிக்குவந்த கலித்தாழிசை. - "அடியெனைத் தாகியு மொத்தும்வந் தளவின்றிக், கடையடி மிகுவன கலித்தாழிசையே." என்பதி யாப்பருங்கலம். எ-று. (27) | 246. | வஞ்சித் தாழிசை வருங்குற ளடிநான் காகித்தான் மூன்றா யடுக்குமோர் பொருளே. | | (இ-ள்.) வஞ்சித் தாழிசை யாமாறுணர்த்துதும். குறளடி நான்காய் ஒரு பொருண் மேன் மூன்றடுக்கி வருவன வஞ்சித் தாழிசை யெனப்படும். (வ-று.) "பருந்துலவப் பார்ப்பினைத் தாய்பரிந் திறகாற் பகைமறைக்கும், பெரும்பழியா னொந்தனமே லிரங்குந்தாய் மனனே காண். - எரிபகறா யிளைம்பார்ப்பை விரிசிறகால் வெயின்மறைக்கும், விரகத்தா னொந்தனமேற் பரியுந்தாய் மனனே காண். - இடித்துழித்தா யிரும்பார்ப்பைக் கடிச்சிற கான் மழைமறைக்கு, மிடுக்கணா னொந்தனமே லடுக்குந்தாய் மனனே காண்." எ-ம். வரும். "குறளடி நான்கின் கூடின வாயின், முறைமையி னவ் வகை மூன்றிணைந்தொன்றி, வருவன தாழிசை வஞ்சியின் பெயரே." என் பதியாப்பருங்கலம். - இவ்வாறன்றி நாற்குற ளடியா லொன்றாய்த் தனி வரிற்றாழிசையாகா. மேற்காட்டிய வடிவஞ்சித்துறை யெனப்படு மென்று ணர்க. அன்றியும், (வ-று.) "பிணியென்று பெயராமே, துணிநின்று தவஞ் செய்வீ, ரணிமன்ற லுமைபாகன், மணிமன்று பணியீரே, என்னென்று பெயராமே, கன்னின்று தவஞ்செய்வீர், நன்மன்ற லுமைபாகன், பொன் மன்று பணியீரே, அரிதென்று பெயராமே, வரைநின்று தவஞ்செய்வீ, ருரு மன்ற லுமைபாகன், றிருமன்று பணியீரே." இதுவும் வஞ்சித்தாழிசை. ஆகையினாற் பாவினமாகிய தாழிசை யிலக்கணம் வந்தவாறு காண்க. ஆயினுந் தோடி ராகத்துக்கேற்ற வடியா னடக்கு மாசிரிய விருத்த மெல்லா மின்று தாழிசை யெனப்படும். எ-று. (28) | ............................. | விருத்த விலக்கணம் வருமாறு:- | Viruttam. | 247. | விருத்த மென்ப விரவிய வெல்லாச் சீரு மடியுஞ் சிதையாக் கொளினு மவையொத் தனவா யடிநான் கணையுமே | |
|
|