185செய்யுளியல்
248. விருத்த விகற்பம் விளக்கிய காலை
வஞ்சி சிந்தடி வருங்கலி யளவடி
யடிதொறுந் தனிச்சொ லணைவது வெள்ளை
யகவல் கழிநெடி லடிகொள் விருத்தமே.
 
     (இ-ள்.) விருத்தவிகற் பமுணர்த்துதும். மேற் றத்த மிடத்துக்காட்டி யபடி
வஞ்சித்துறையென வொத்தநாற் குறளடியால் வரும் விருத்தமுங் கலித்துறையென
நானெடிலடியால் வரும் விருத்தமுமன்றியே யொத்த நாற்சிந்தடியால் வருவன
வஞ்சிவிருத்த மெனவும், அளவடியால்வருவன கலிவிருத்த மெனவும், அளவடியாக
மூன்றடியானு நான் கடியானும் வந்தடிதோறுந் தனிச்சொற் பெற்றுவருவன வெளிவிருத்த
மெனவும், கழி நெடிலடியால் வருவன வாசிரிய விருத்த மெனவும் வழங்கும். - "சிந்தடி
நான்காய் வருவன வஞ்சிய, தெஞ்சா விருத்த மென்மனார் புலவர். - அளவடி நான்கின
கலிவிருத் தம்மே. - நான்கடி யானு நடைபெற் றடிதொறுந், தாந்தனிச் சொற்கொளின்
வெளிவிருத் தம்மே. - கழிநெடி லடிநான் கொத்திறி னெல்லா, மழியா மரபா சிரிய
விருத்தமே." என்பதியாப்பருங்கலம். (வ-று.) - "ஆலைவா யடுங்கழைத் தேனுஞ்,
சோலைவாய்ச் சுவைக்கனித் தேனு, மாலைவாய் வழிமலர்த் தேனும், வேலைவாய்
மடுப்பமீன் மேயும். - சாந்த னோதிய தாழ்மொழி, காய்ந்த வேலிரு காதிலும், போந்த
போன்று புகுந்திட, மாந்த ராகுல மன்னினார்." - இவைவஞ்சிவிருத்தம். "தீய்முகத்
திணங்கிலா தில்லைச் செஞ்சுடர், காய்முகத் திருளிலைக் கழுமுந் நீத்தமே, பாய்
முகத்தணையிலை யன்புபற்றிய, வாய்முகத்தரியதோர் வருத்தமில்லையால். - வேய்தலை
நீடிய வெள்ளி விலங்கலி,னாய்தலி னொண்சுட ராழியி னான்றமர், வாய்தலி னின்றனர்
வந்தென மன்னன்முன்,னீதலை சென்றுரை நீள்கடை காப்போய்." இவைகலிவிருத்தம். -
"அங்கட்கமலத் தலர்கமலமேயீரு - நீரே போலும், வெங்கட் சுடிகை விடவரவின்
மேயீரு - நீரேபோலுந், திங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளீரே - நீரேபோலும்."
இது மூன்றடியாலடி தோறுந் தனிச்சொற் பெற்றுவந்த வெளிவிருத்தம். - "துன்னித்
தொன்னோய் தீர்ந்து துதிப்பா ரொருபாலார், சென்னித் தாராய்ச் சீரடி கொள்வா
ரொருபாலா, ருன்னிக் குன்றா வுன்புக ழார்ப்பா ரொருபாலார், கன்னித் தாயுன் காவலில்
வாழ்வா ரொருபாலார்." இது நான்களவடியாலடிதோறுந் தனிச்சொற்பெற்றுவந்த
வெளிவிருத்தம். - "மணிபுரை யரும்பி வான்மீன் வடிவொடு மலர்ந்து வெண்முத்,
தணிபுரை மணங்கொ டேன்பெய் யழகல ரன்று வாடித், துணிபுரை கீழ்வீழ்ந்தாய
தூளினைக் கன்றுஞ் சென்மப், பிணிபுரை பிணித்த யாமோ பேர்கிலா வாழ்துமென்பாம்."
இது அறுசீர் ஆசிரியவிருத்தம். "தூமமேய்ந் திருண்ட குழலினார்மார்பிற் றுளங்கிய
முத்தணி வடமேற், காமனே களிப்புற் றூசலா டியகால் கசடறு மிவர்வரக் கண்டு, வீமமே
யுற்று நடுக்கொடு வழுவி வீழ்ந்துளத் தழற்றழ லாறித், தாமமேயளி