188தொன்னூல்விளக்கம்
(வ-று.) "வீங்கோத வண்ணன் விரைததும்பும் பூம்பிண்டித் தேங்கோதை முக்குடைத்
தேவர் பெருமானைத், தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி, நாவி னவிற்றாதார்
வீட்டுலக நண்ணாரே." எ-ம். தேம்பாவணி. - "பாற்கட லென்னுள்ளப் பதுமமல ரரும்ப,
நூற்கடலே யீங்கு தித்தாய் நுண்மலர்க்கண் முத்தரும்ப, நுண்மலர்க்கண் முத்தரும்ப
நோய் செய் வினைசெய்தே, னென்மலர்க்கண் முத்தரும்ப வின்று வினைதீர்த்தாய்."
எ-ம். எழுத்தசை சீர்களு மொவ்வாமல் வெண்டளையாக வந்த விருத்த மிவையெனக்
காண்க. அன்றியும் பாரதத் துள்ளே மற்றொருவகை விருத்தங் காணப்படும்.
அஃதெத்தன்மைத் தோவெனின் முதற்றொடை யடியெதுகை யன்றிப் பொழிப்
பெதுகையும்பெற்ற பின்னிரண்டாந் தொடையு மிவ்வாறே வேறோ ரெதுகைப்
பெறுமென்றறிக. (வ-று.) "பற்பலரு மத்திரதர் விற்பல வணக்கியெதிர், சொற்பொலி
வயப்பகழி சிற்சில தொடுத்தனகாற், பெய்கணை யடங்கவிவ னெய்கணை விலக்கிடவு,
மொய்கணை யனந்தமிவன் மெய்கணைய வுந்தினனே." எ-து. பாரதத்துட் பதிமூன்றாம்
போர், 56-ம் பாட்டெனக் கொள்க. ஆகையில் விருத்தமும் விருத்த விகற்பமும்
வந்தவாறு காண்க. எ-று. (31)
 
250. பத்திய மென்ப பாவொடு பாவினங்
கத்திய மமைபோற் கலையல் லனவே
வண்ண மென்ப வலிமெலி யிடையொழு
கெண்ணுருட் டெனமுடு கேந்த றூங்க
லகைப்புப் புறப்பாட் டகப்பாட் டளபு
பாவு நலிபு தரவு வொரூஉக்
குறினெடில் சித்திரங் கூறுபா டிருபதே.
 
     (இ-ள்.) பாப்பாவினங்கட்கும் பொதுவிதி யுணர்த்துதும். மேற் கூறிய விலக்கண
வகையான் வரும் பாவைந்தும் பாவின முன்னான் குமாகப் பதினேழு வகைச் செய்யுளும்
பொதுப் பெயராக வடமொழி யாற் பத்திய மென்று வழங்கும். இலக்கணஞ் சிதையினு
மிலக்கணப் பாவினடையோ டொப்ப வருவன வெல்லாங் கத்திய மெனப்படும்.
ஆகையிற் கொன்றை வேந்த னென்பது முதலாயின கத்திய மெனக் கண்டுணர்க.
அன்றியும் பாவிற்கும் பாவினங்கட்கு மேற்கும் வண்ண மிருபதென்மனார்
தொல்காப்பியனார் முதலாப் பலரே. அவை யிவையென வருமாறு. எதுகை முதலடி
யெல்லாம் வல்லின மிகுவன வல்லிசை வண்ணமும், மெல்லின மிகுவன மெல்லிசை
வண்ணமும், இடையின மிகுவன இடையிசை வண்ணமும், மூவினமும் விரவி வருவன
ஒழுகிசை வண்ணமும், பலவை யெண்ணி வருவன எண்ணுவண்ணமும், அராகத்தோடு
வருவன உருட்டு வண்ணமும், அராகமாய் வருவதன்றி யடியின்