ஆகையிற் றிருவள்ளுவப்பயனென்பது:- பல பாட்டாகியு மொருவனா லுரைக்கப் பட்டவதனாற் றொக்கு நின்று தொகை நிலைச் செய்யு ளாயிற்று. நெடுந்தொகை யென்பது:- பலரா லுரைக்கப்பட்ட தொகைநிலைச் செய்யுள். புறநானூ றென்பது:- பொருளாற் றொகுத்த தொகை நிலைச் செய்யுள். களவழி நாற்ப தென்ப:- இடத்தாற் றொகைநிலைச் செய்யுள். கார்நாற்ப தென்பது:- காலத்தாற் றொகை நிலைச் செய்யுள். ஐந்திணை யென்பது: தொழிலாற் றொகை நிலைச் செய்யுள். கலித்தொகை யென்பது:- பாட்டாற் றொகைநிலைச் செய்யுள். குறுந்தொகை யென்பது:- அளவினாற் றொகைநிலைச் செய்யுள். பிறவுமன்ன. எ-று. (3) |
254. | தொடர்நிலைப் பொருளினுஞ் சொல்லினு மாகும் பொருட்டொடர் நிலைதற் பொருடரத் தானே பற்பல பாட்டாய்ப் பயனிற் றொடருஞ் சொற்றொடர் நிலையெனிற் றூக்கந் தாதியே. | |
(இ-ள்.) தொடர்நிலைச்செய்யு ளாமாறுணர்த்துதும். பலபாட்டாகிப் பொருளானுஞ் சொல்லானுந் தொடர்ந் தொருப்பட வருவன தொடர்நிலைச் செய்யு ளெனப்படும். இவற்று ளொருபொருளை விளக்கத் தம்முட் டொடர்ந்து வரும் பலபாட்டே பொருட்டொடர்நிலைச் செய்யு ளென்ப. இராமாயணஞ் சிந்தாமணி பலவு மிந்நடை யுளவெனக் கொள்க. அன்றியு மொருசெய்யுளிறுதி மற்றொரு செய்யுட் காதியாகச் செய்யு ளந்தாதியோடு தொடுத்து வருவன சொற்றொடர்நிலைச்செய்யு ளென்ப. கலம்பக முதலிய விந்நடை யுளவெனக் கொள்க. - தண்டியலங்காரம். - "பொருளினுஞ் சொல்லினு மிருவகைத் தொடர் நிலை-செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே." இவை மேற்கோள். எ-று. (4) |
255. | பொருட்டொடர் நிலையே புகலிற் காப்பியம் பெருங்காப் பியமெனப் பிரிவிரண் டவற்றுட் காப்பிய மறமுத னான்கிற் குறைநவும் புராணம் பற்கதை புனைநவு மென்ப. | |
(இ-ள்.) காப்பியமும் புராணமு மாமாறுணர்த்துதும். கவியாற் பாடப்படுவன வெல்லாங் காப்பிய மாயினும் பொதுவாய் நின்ற பெயரைச் சிறப்பிற் குறுகிப் பொருட்டொடர் நிலைச் செய்யுளைக் காப்பிய மென்றார். அங்ஙனஞ் சேற்றுண் மலர்வன வெல்லாம் பங்கய மெனப்படு மாயினும் பெயர் தாமரை யொன்றின் மேலாயிற்று. இவை பெருங்காப்பிய மென்றுங் காப்பிய மென்று மிருவகைப் படும். இவற்று ளறம் பொரு ளின்பம் வீடென நான்கு மொருப்படத் தோன்ற விரையா தவற்று ளொன்றும் பலவுங் குறைந்து வருவன காப்பிய மெனப்படும். காப்பியந்தானே பலகதைகளை விளக்கிவரிற் புராண மெனப்படும். - தண்டியலங்காரம். - "பெருங்காப் பியமே காப்பிய மென்றாங், |