கிரண்டா வியலும் பொருட் டொடர் நிலையே - அறமுத னான்கினுங் குறைபா டுடையது, காப்பிய மென்று கருதப் படுமே." இவை மேற்கோள். எ-று. (5) | 256. | பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வரும்பொரு ளிவற்றினொன் றேற்புடைத் தாக முன்வர வியன்று நாற்பொருட் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகட னாடு வளர்நகர் பருவ மிருசுடர் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாட றேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவிகல் வென்றி சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய வென்ப கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர். | | (இ-ள்.) பெருங் காப்பிய மாமாறுணர்த்துதும். பெருங் காப்பிய மா வதற்குத் தன் பா நாயக னிகரில்லாத னாகவும், அறம்பொரு ளின்பம் வீடென நாற்பொருள் விளைவதற் கேதுவாகவும் வேண்டும். அதன்றிப் பெருங் காப்பியத் துறுப்பாவன:- தெய்வ வணக்கமுஞ் செய்பொரு ளுரைத்தலு மென்றிவ் விருவகைச் சிறப்புப் பாயிரமு மிவ்விரண்டிற் கேற்புழி வாழ்த்துங் கூட்டவு மலையுங் கடலு நாடு நகரும் பருவங்களும் பருதி யுதையமு மதியவுதையமு மென்றிவற்றின் வருணைனையும், நன்மண மாதலும், பொன்முடி சூடலும், பொழிலினு நீரினும் விளையாடலும், பெற்ற சிறுவரும் புலவியுங் கலவியு மென்றிவற்றைப் புகழ்தலும், மந்திரமுந் தூதுஞ் செலவும் போரும் வெற்றியு மென்றிவற்றைத் தொடர்ந்து கூறலும், பெருங்காப்பயித் துறுப்பாம். இவற்றுட் சில குறையினுங் குறை யன்றன வுரைத்தனர் கற்றோர். சொல்லப்பட்ட வுறுப்பெல்லாம் வேறு வேறாய்ச் சருக்க மாகவு மிலம்பக மாகவும் பரிச்சேத மாகவும் பிரிந்து முடியும். சருக்க மெனினும் படல மெனினு மொக்கும். இவற்றுள் தொடுத்த |
|
|