பொருள் பலவாகப் பிரித்துத் தருவன சருக்கம் படல முதலாயின அங்ஙனங் கம்பன் சீதை மணக்கதை மிதுலைகாண் படலத்திற் றொடங் கிப் பலபிரிவாக வகுத்துப் பதினைந்தாம் படலத்தின் முடித்தவாறு காண்க. இலம்பகமோ வெனிற் றொடுத்த பொருள் பிரிவிரிவின்றி யொன்றாய்த் தருமெனக் கொள்க. அங்ஙனஞ் சிந்தாமணியிற் காந்துருவத்தை முதலெண்மா மணக்கதை யொவ்வோ ரிலம்பகத்திற் றொடுத்து முடித்தது காண்க. அன்றியுஞ் சுவையும் பாவமும் விரும்ப வென்பது வீரமிழி வச்சம் வியப் பலங்கார முருத்திர நகையென வெண்மைப் பாடுகள் சுவையெனவு மவற்றைக் காட்டுங் குறிப்புகள் வடமொழியிற் பாவமெ னவுங் கொள்க. எ-று. (6) |
257. | பிள்ளைக் கவியின் பெற்றியைக் கூறச் சுற்ற வகுப்பொடு தெய்வங் கொலைகாப்ப வொற்றைப் படமூன் றாதி மூவே ழீறாய் மதியினு மைந்தே ழாண்டினுங் காப்புச் செங்கீரை தால்சப் பாணி முத்தம் வரானை யம்புலி சிறுபறை சிற்றில் சிறுதே ராடவர்க் கேகடை மூன்றொழித் தரிவையர்க் காங்கழங் கம்மானை யூச லென்றிவை யவ்விரு பாற்குப் பத்துறுப் பாயொவ் வொன்று விருத்தம் பப்பத் தாகப் பாட லென்ப. | |
(இ-ள்.) பிள்ளைக்கவியாமாறுணர்த்துதும். பிள்ளை பிறந்த மும்மாத முதற் கொண் டிருபத் தொன் றெல்லையாக வைத்தவற்று ளொற்றைப் படக் கிடந்த மூன் றைந் தே ழொன்பது பதினொன்று பதின்மூன்று பதினைந்து பதினேழு பத்தொன்ப திருபத்தொன் றெனப் பத்துமாதங்களினு மன்றி யைந்தா மாண்டினு மேழா மாண்டினு முரைக்கத் தக்க பிள்ளைக் கவியிற் சுற்றத்தோடு பாநாயகனைத் தெய்வங் கொலை யகற்றிக் காப்ப வென்று காப்பே முதலுறுப் பன்றிச் செங்கீரையுந் தாலுஞ் சப்பாணியு முத்தமும் வாரானையு மம்புலியு மென் றிவ்வேழு மாந்தர்க்கு மாதர்க்கும் பொதுவாய் நிற்ப, சிறுபறையுஞ் சிற்றில்லுஞ் சிறு தேருமென மூன்றா டவர்க்கும், தீம்புன லம்மானை யூசலென் றிவை யாடலென மூன் றரிவை யர்க்கும், சிறப்பா யொவ்வொரு பாற்குப் பத்துறுப்பாக வொவ்வோ ருறுப்புப் பத்து விருதமாகப் பலசந்தமாய் நடக்கும் பிள்ளைக்கவி யெனக் கொள்க. பிள்ளைக்கவி யெனினும் பிள்ளைத்தமிழெனினு மொக்கும். அன்றியுங், கழங் கென்பதை யபிடேக மென்மரு முளரே. உதாரணம் வந்த வழியே காண்க. எ-று. (7) |