196தொன்னூல்விளக்கம்
258. கலம்பகத் துட்புயங் கைக்கிளைத் தவமே
காலம்வண் டம்மானை காற்றுப் பாணன்
குறஞ்சித் திரங்கல் குளிர்தழை சம்பிரத
மறந்தூ தூசன் மதங்க மடக்கென
விரவிமூ வாறும் வேண்டு முறுப்பா
வொருபோகு வெண்பா வுடன்கலித் துறையிவை
நிரையே முதற்கண் ணின்றுபிற் கலந்தவைம்
பாத்துறை விருத்த மந்தாதி வருமே
வந்தா லீசர்க்கு வருநூறு முனிமெய்யர்க்
கைந்தஃகு மரசர்க் காந்தொண் ணூறு
மமைச்சர்க் கெழுபது மைம்பதும் வணிகர்க்
கமைந்த வேனையோர் காறைந் தளவே.
 
     (இ-ள்.) கலம்பக மாமாறுணர்த்துதும். புய முதலாக மடக்கீறாகக் கிடந்த
மூவாறுறுப்பு முன்னும் பின்னுந் தம்முட் கலந்து வரவே நடக்குங் கலம்பக மெனக்
கண்டுணர்க. அதுவே வழங்கும் பாட்டியாதோ வெனின் முதற்கண் ணொருபோகும் -
வெண்பாவுங் - கலித்துறையு - மிவைமூன் றொழுங்கு மாறாமல் வந்த பின்னர்,
வெண்பா - வகவல் - கலிப்பா - வஞ்சிப்பா - மருட்பா - வென வைவகைப் பாவும்,
வஞ்சித் துறையும், கலித்துறையும், பலவகை விருத்தமுந் தம்முட் கலந்து வரப்பெறும்.
வரினு மொரு செய்யு ளீற்று மொழி மற்றொரு செய்யு ளாதியாகவு மாதிச் செய்யுண்
முதன் மொழி யீற்றுச் செய்யுட் கடை மொழி யாகவும் வந்தந்தாதி வரு மெனக் கொள்க.
இவற்று ளொருபோகென்பது:- மயங்கிசைக் கொச்சகக் கலி ப்பா வென்றுணர்க. ஆகையி
லிது நடக்குந் தன்மையை 234-ஞ் சூத்திரத்துட் காண்க. அன்றியு மிம்மூறை நடக்குங்
கலம்பகத் தளவியாதோ வெனில் வானோர்க்குக் குறையாத வொருநூறு பாட்டாகவும்,
முனிவர்க்கு மந்தணர்க்கு மைந்து குறைத்துத் தொண்ணூற் றைந்தாகவும், அரசர்க்குத்
தொண்ணூறாகவும், மந்திரி தளகருத்தாவுக் கெழுபதாகவும், வணிகர்க் கைம்பதாகவும்,
ஒழிந்த மற்றையவர்க் கொரு முப்பதாகவும் வருமெனக் கொள்க. எ-று. (8)
 
259. பரணிக் காயிரம் பகடு கொன்ற
தெரிவருந் தலைவனாய்த் தேவவாழ்த் தாதி
கடைதிறப் புங்கனல் காய்நிலம் பாலையும்
புடையிற் காளி பொலிந்த கோயிலும்
பேயோடு காளி பேய்கள் காளியோ
டோயில வுரைத்தலி லோர்ந்தவன் கீர்த்தி