| புகறலு மவன்வழி புறப்பொரு டோன்றவு மிகவெஞ் சமரும் விரும்பலு மென்றிவை யளவடி முதற்பல வடியா னீரடி யுளபஃ றாழிசை யுரைப்பது நெறியே. | |
(இ-ள்.) பரணி யாமாறுணர்த்துதும். போர்முகத் தாயிரம் யானையைக் கொன்ற வீரனே பாட்டு நாயகனாகக் கொண்டு பரணிக் குறுப்பெனக் கடவுள் வாழ்த்துங் கடைதிறப்பும் பாலைநிலமுங் காளிகோயிலும் பேய்களோடு காளியுங் காளியோடு பேய்களுஞ் சொல்ல, சொல்லக் கருதிய நாயகன் கீர்த்தி விளங்கலு மவன் வழியாகப் புறப்பொரு டோன்ற வெம்போர் வழங்க விரும்பலு மென்றிவையெல்லா மிருசீர் முச்சீரடி யொழித்தொழிந்த மற்றடியாக வீரடி பஃறாழிசையாய்ப் பாடிய செய்யுளே பரணி யெனப்படும். எ-று. (9) |
260. | உலாவென மலைநதி யுயர்நா டூர்மாலை குலாவிய பரிகரி கொடிமுர சுயர்கோ லியைந்த தசாங்கமு மேழ்பருவத்தார் வியந்து தொழுதலும் வேண்டுறுப் பாயக் கலிவெண் பாவாற் குலமகற் புகழ்தலே. | |
(இ-ள்.) உலா வாமாறுணர்த்துதும். மலையும் - யாறு - நாடு - மூரு - மாலையுங் - குதிரையும் - யானையுங் - கொடியு - முரசுஞ் - செங்கோலு மென வித் தசாங்கம் பத்துறுப்பாக விரிவாய் விளக்கி, யவை யத்துணையு முடைய வுயர்ந்த குலமக னெடுந்தெரு வரு கையிலவனைக்கண்ட வயதேழும் - பதினொன்றும் - பதின்மூன்றும் - பத்தொன்பது - மிருபத்தைந்து - முப்பத்தொன்று - நாற்பது முள பேதை - பெதும்பை - மங்கை - மடந்தை - யரிவை - தெருவை - பேரிளைம் பெண் ணென வெழுவகைப் பருவமாத ருளம்வியந் தவனைத்தொழுதலும், மற்றோ ரெழுறுப்பாக விளக்கிக் கலிவெண்பாவாற் பாடிய செய்யு ளுலா வெனக் கொள்க. கலிவெண்பா வருந்தன்மையை 235-ம். சூத்திரத்துட் காண்க. எ-று. (10) |
261. | மடலென்ப துலாப்போல் வழங்கினுங் கண்ட மடவார் மயலும் வருந்தலை மகன்பெயர்ப் படமாறா வெதுகையும் பகர்த லுரித்தே. | |
(இ-ள்.) மடலாமா றுணர்த்துதும். உலாவுறுப் பன்றிப் பாட்டுடைத் தலைவனைக் கண்ட மாதர்க் கெழும்பின வினிய காதலு மற்றோ ருறுப்பாகக் கூட்டி யவன்பெய ரெதுகையாகக் கொண்டோ ரெதுகையோடு பாவெல்லாம் வந்துலாப்போல் கலிவெண்பாவாற் பாடிய செய்யுண் மடலென வழங்கும். எ-று. (11) |