198தொன்னூல்விளக்கம்
262. அங்க மாலையே யங்க வகுப்பெலாம்
பாதாதி கேசமுங் கேசாதி பாதமுங்
கலிவெண்பா வாதல் வெளிவிருத் தமாதல்
வலிதெனப் புகழ்ந்து வகுத்த செய்யுளே.
 
     (இ-ள்.) அங்கமாலை யாமாறுணர்த்துதும். கலிவெண்பா வாலாயினும்
வெளிவிருத்தத் தாலாயினு முடலிலுள்ள வுறுப்பெலா மொவ்வொன்றாக விரித்துப்
புகழ்ந்துபாடிய செய்யு ளங்கமாலையெனப்படும். அவற்றுட் பாதந்தொட்டு மேலேறி
தலைமயி ரளவும் புகழ்வது பாதாதி கேசமெனவும், சிரந் தொட் டிறங்கிப் பாதத்தளவும்
புகழ்வது கேசாதிபாத மெனவும் வழங்கும். எ-று. (12)
 
263. சின்னப்பூ வெனத்தெளி நேரிசை வெண்பா
நூறுதொண்ணூ றெழுப தைம்பதாறைந்துமாய்ப்
பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே.
 
     (இ-ள்.) சின்னப்பூ வாமாறுணர்த்துதும். மலைமுதற் றசாங்கத் தீரைம் பொருளையு
நேரிசை வெண்பாவாலே சூத்திரத்துட் காட்டிய வளவொடு பாடிய செய்யுளே சின்னப்
பூவென வழங்கும். அன்றியுந் தசாங்கத் தொவ்வொருபொரு ளொவ்வொரு
வெண்பாவாகப் பத்துப்பாடலுமா மங்களம் பாடியசெய்யுள் தசாங்க மெனப்படும்.
எ-று.(13)
 
264. ஒருபா வொருபதா முரைப்பரும் வெண்பா
வகவல் கலித்துறை யவற்று ளொன்றாற்
பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே.
 
     (இ-ள்.) ஒருபா வொருபதா மாறுணர்த்துதும். எப்பொருண் மேலும் பத்து
வெண்பாவாயினும், பத்துக்கலித்துறையாயினும், பத்தாசிரியப்பாவாயினும், பாடியசெய்யு
ளொருபா வொருப தெனப்படும். எ-று. (14)
 
265. இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய்
வெள்ளை யகவல் விரவிப் பாடலே.
 
     (இ-ள்.) இருபா விருபதா மாறுணர்த்துதும். வெண்பாவு மகவலு முறையே கலந்
தோரிருபது பாவான் முடித்த செய்யு ளிருபா லிருப தெனப் படும். எ-று. (15)
 
266. ஆற்றுப் படையென்ப வாற்றெதிர்ப் படுத்திய
புலவர் பாணர் பொருநர் கூத்தர்
பலபுக ழகவற் பாவொடு பாலே.
 
     (இ-ள்.) ஆற்றுப்படை யாமாறுணர்த்துதும். ஒருவனைப் புகழ்ந்து வாழ்த்தப்
புலவரும் பாடுவரும் பொருநருங் கூத்தரு மென் றிவரடங்கலு