262. | அங்க மாலையே யங்க வகுப்பெலாம் பாதாதி கேசமுங் கேசாதி பாதமுங் கலிவெண்பா வாதல் வெளிவிருத் தமாதல் வலிதெனப் புகழ்ந்து வகுத்த செய்யுளே. | |
(இ-ள்.) அங்கமாலை யாமாறுணர்த்துதும். கலிவெண்பா வாலாயினும் வெளிவிருத்தத் தாலாயினு முடலிலுள்ள வுறுப்பெலா மொவ்வொன்றாக விரித்துப் புகழ்ந்துபாடிய செய்யு ளங்கமாலையெனப்படும். அவற்றுட் பாதந்தொட்டு மேலேறி தலைமயி ரளவும் புகழ்வது பாதாதி கேசமெனவும், சிரந் தொட் டிறங்கிப் பாதத்தளவும் புகழ்வது கேசாதிபாத மெனவும் வழங்கும். எ-று. (12) |
263. | சின்னப்பூ வெனத்தெளி நேரிசை வெண்பா நூறுதொண்ணூ றெழுப தைம்பதாறைந்துமாய்ப் பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே. | |
(இ-ள்.) சின்னப்பூ வாமாறுணர்த்துதும். மலைமுதற் றசாங்கத் தீரைம் பொருளையு நேரிசை வெண்பாவாலே சூத்திரத்துட் காட்டிய வளவொடு பாடிய செய்யுளே சின்னப் பூவென வழங்கும். அன்றியுந் தசாங்கத் தொவ்வொருபொரு ளொவ்வொரு வெண்பாவாகப் பத்துப்பாடலுமா மங்களம் பாடியசெய்யுள் தசாங்க மெனப்படும். எ-று.(13) |
264. | ஒருபா வொருபதா முரைப்பரும் வெண்பா வகவல் கலித்துறை யவற்று ளொன்றாற் பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே. | |
(இ-ள்.) ஒருபா வொருபதா மாறுணர்த்துதும். எப்பொருண் மேலும் பத்து வெண்பாவாயினும், பத்துக்கலித்துறையாயினும், பத்தாசிரியப்பாவாயினும், பாடியசெய்யு ளொருபா வொருப தெனப்படும். எ-று. (14) |
265. | இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய் வெள்ளை யகவல் விரவிப் பாடலே. | |
(இ-ள்.) இருபா விருபதா மாறுணர்த்துதும். வெண்பாவு மகவலு முறையே கலந் தோரிருபது பாவான் முடித்த செய்யு ளிருபா லிருப தெனப் படும். எ-று. (15) |
266. | ஆற்றுப் படையென்ப வாற்றெதிர்ப் படுத்திய புலவர் பாணர் பொருநர் கூத்தர் பலபுக ழகவற் பாவொடு பாலே. | |
(இ-ள்.) ஆற்றுப்படை யாமாறுணர்த்துதும். ஒருவனைப் புகழ்ந்து வாழ்த்தப் புலவரும் பாடுவரும் பொருநருங் கூத்தரு மென் றிவரடங்கலு |