20தொன்னூல்விளக்கம்
லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவும் திரியும். (உ-ம்.) கல் + புறம் = கற்புறம், நூல்
+ புறம் = நூற்புறம், விரல் + புறம் = விரற்புறம், சாரல் + புறம் = சாரற்புறம், எ-ம். முள்
+ புறம் = முட்புறம், வாள் + புறம் = வாட்புறம், புரள் + புறம் = புரட்புறம், எ-ம்.
திரிந்தன. பிறவுமன்ன. அல்வழி யிடத்தோவெனில், இயல்புந்திரிபுமாம். (உ-ம்.)
கல்பெரிது, விரல்சிறிது, வாள்பெரிது, எ-ம். இயல்பாயின. கல் + பெரிது = கற்பெரிது,
வாள் + பெரிது = வாட்பெரிது, எ-ம். திரிந்தன. பிறவுமன்ன. வேற்றுமைப்புணர்ச்சியில்
லகார, ளகாரவீற்றில் தவ்வணையின் வருமொழிமுதலும் நிலைமொழியீறுந் திரியும்.
(உ-ம்.) நூல் + தலை = நூறலை, நூற்றலை; கடல் + திரை = கடறிரை, கடற்றிரை; வாள்
+ திறல் = வாடிறல், வாட்டிறல்; அவள் + தாய் = அவடாய், அவட்டாய்; எ-ம்.
இருமொழி திரிந்தன. பிறவுமன்ன. அல்வழிப்புணர்ச்சியில் தனிக்குறிலல்லாத லகர
ளகரவீற்றில் தவ்வணையில் இயல்பும் கெடுதலுமாம். (உ-ம்.) பொறுத்தல் + தலை =
பொறுத்தறலை, அவள் + தந்தாள் = அவடந்தாள், எ-ம். திரிந்தன. பிறவுமன்ன.
அன்றியும், பொறுத்தல்தலை, அவள் தந்தாள், எ-ம். வழக்கிடத்தாகும். அல்வழிப்
புணர்ச்சியில் தனிக்குறில் லகர ளகரவீற்றில் தவ்வணையின் லகரம் றகரமாகவும், ளகரம்
டகரமாகவும், ஆய்தமாகவும்பெறும். (உ-ம்.) கல் + தீது = கற்றீது, கஃறீது; பல் +
தொடை = பஃறொடை, அல் + திணை = அஃறிணை. எ-ம். முள் + தீது = முட்டீது,
முஃடீது, எ-ம். பிறவுமன்ன. அன்றியும், நிலைமொழி லகரளகரவீற்றில் மெல்லினம்வரின்
லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவும்திரியும் வேற்றுமையிடத்தும் அல்வழி
யிடத்தும். (உ-ம்.) கல் + மலை = கன்மலை, முள் + முடி = முண்முடி, எ-ம். கல் +
முளைத்தது = கன்முளைத்தது, முள் + முரிந்தது = முண்முரிந்தது, எ-ம். இருவழியுந்
திரிந்தன. பிறவுமன்ன. தனிக்குறிலல்லாத லகரளகரவீற்றில் நகரம்வரின் லகர
ளகரந்திரிந்து நகரங்கெட்டு னகரணகரமாகும். (உ-ம்.) விரல் + நீளம் = விரனீளம், கால்
+ நீளம் = கானீளம், நூல் + நுனி = நூனுனி, எ-ம். இருள் + நீண்டது = இருணீண்டது,
கோள் + நீண்டது = கோணீண்டது, வாள் + நுனி = வாணுனி, எ-ம். பிறவுமன்ன.
இவ்வாறன்றி, தனிக்குறிலணைந்த லகரளகரவீற்றில் நகரம்வரின் லகரளகரந் திரிந்து
நகரங்கெட்டு னகர ணகரமாகும். (உ-ம்.) கல் + நெஞ்சு = கன்னெஞ்சு, முள் + நிலம் =
முண்ணிலம், எ-ம். வரும். எ-று. (6)
 
27. சஞயவரின் ஐஅ ச்சமமெனத்திரியும்.
 
     (இ-ள்.) அகரவைகாரங்களின் விகாரமாமாறுணர்த்துதும்.மொழிக்கு முதலினும்
மொழிக்கு இடையினும் நின்ற அகர ஐகாரங்கள் ச ஞ ய வரின் தம்மில்வேறுபாடின்றி
ஒன்றற்கொன்றாகத்திரியும். (உ-ம்.) பசல், பைசல், மஞ்சு, மைஞ்சு, அய்யர், ஐயர், எ-ம்.
மொழிமுதல் அகரம், ஐகாரமாகத்திரிந்தது, அரசு, அரைசு; முரஞ்சு, முரைஞ்சு; அரயர்,
அரையர்; எ-ம். மொழியிடை