200தொன்னூல்விளக்கம்
271. வரலாற்று வஞ்சியாம் வல்லறமுத னான்கும்
வருமா றுரைத்து வஞ்சி பாடலே.
 
     (இ-ள்.) வரலாற்றுவஞ்சி யாமாறுணத்துதும். அறம் பொருளின்பம் வீடென நான்கு
மாமாறுணர்த்தி வஞ்சிப் பாவான் முடிந்த செய்யுளே வரலாற்று வஞ்சி யெனப் படும்.
எ-று. (21)
 
272. நான்மணி மாலையே நாற்பதந் தாதியாய்த்
தான்மணிக் கொத்தன தந்தன்மன விருத்தமே.
 
     (இ-ள்.) நான்மணிமாலை யாமாறுணர்த்துதும். கழிநெடிலடியால் வரு மாசிரிய
விருத்த மந்தாதியா யொரு நாற்பது மாகத் தொடுத்த செய்யுளே நான்மணிமாலை
யெனப்படும். மனவிருத்த மெனினு மாசிரிய விருத்த மெனினு மொக்கும். எ-று. (22)
 
273. விருத்த விலக்கணம் விளம்புங் காலைக்
குடையூர் நாடுகோல் பரிகரி வில்வடி
வாள்வே லொன்பான் வகுப்புமன விருத்த
மீரைந் தவ்வவற் றியற்பெயர் கொள்ளுமே.
 
     (இ-ள்.) விருத்த விலக்கண மாமாறுணர்த்துதும். பாட்டுடைத் தலை மகனுடைய
குடையு - மூரு - நாடுஞ் - செங்கோலுங் - குதிரையும் - யானையும் - வில்லும் -
வாளும் - வேலு - மென்றிவ் வொன்ப துறுப்பும் விளங்கித் தோன்றப் புகழ்ந்
தொவ்வொரு வகுப்பிற்குப் பத்தாசிரிய விருத்த மாகப் பாடவே விருத்த விலக்கண
மெனும் பெயர்மெற் றொவ்வொரு வகுப்புத் தத்த முறுப்பியற் பெயரைக் கொண்டு
வழங்கும். அங்ஙனங் குடைவிருத்த மூர்விருத்த நாட்டு விருத்தம். பிறவுமன்ன.
எ-று.(23)
 
274. இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய்
வெள்ளை யகவல் விரவிப் பாடலே.
 
     (இ-ள்.) அட்டமங்கல நவமணிமாலை யாமாறுணர்த்துதும். பாட்டு டைத்
தலைவனைக்கவி கவிதோறுந் தெய்வங் காப்பவென் றாசிரிய விருத்த மெட்டாக முடிவ
தட்ட மங்கல மெனவு மொன்பதாக முடிவது நவமணி மாலை யெனவும் வழங்கும்.
எ-று. (24)
 
275. பலசந்த மாலை பப்பத் தொருசந்தஞ்
சிலவந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே.
 
     (இ-ள்.) பலசந்தமாலை யாமாறுணர்த்துதும். அந்தாதியாக நூறாசிரிய விருத்தம்
பாடி பப்பத்தொவ்வொரு சந்தமாகத் தொடுத்த செய்யுளே பல சந்தமாலை யெனப்படும்.
எ-று. (25)