201செய்யுண்மரபியல்
276. ஊச லென்ப வூசலாய்க் கிளையள
வாசிரிய விருத்த மாகப் பாடலுந்
தன்னொலி வருங்கலித் தாழிசைப் பாடலும்
வண்ணக முதற்கண் வரினு மியல்பே.
 
     (இ-ள்.) ஊச லாமாறுணர்த்துதும். ஊசலைப் பாடிப் பாட்டுடைத் தலைமகனது
சுற்றத்தாரளவாக வாசிரிய விருத்த மாயினுங் கலித்தாழிசை யாயினும் பாடுவ தூச
லெனப்படும். அவற்றின் முதற்கண் வண்ணக மொன்று வரினு மியலு மென்றுணர்க.
வண்ணக மெனினு மராக மெனினு முடுகிய லெனினு மொக்கும். எ-று. (26)
 
277. கோவையே யகப்பொருட் கூறுபா டிசைப்பட
நாவலர் கலித்துறை நானூறுரைத்தலே.
 
     (இ-ள்.) கோவை யாமாறுணர்த்துதும். பொருளதிகாரத்தின் கண்ணே காட்டிய
தன்மையிற் களவு, கற்பென விருபா லுடைய வகப்பொருட்டிணைக ளேழும் விளக்கிக்
கலித்துறை நானூறாகப் பாடித் தொடுத்த செய்யுள் கோவை யெனப்படும். எ-று. (27)
 
278. இரட்டை மாலையா மிணைந்த பப்பத்தாய்
வெண்பா கலித்துறை விரவிப் பாடலே.
 
     (இ-ள்.) இரட்டை மாலை யாமாறுணர்த்துதும். எப்பொருண்மேலு முறையே கலந்த
பத்து வெண்பாவும், பத்துக் கலித்துறையும் வருவ திர ட்டைமாலை யெனப் படும்.
எ-று. (28)
 
279. மணிமாலை வெண்பா வகைநா லைந்துட
னிணையாய்க் கலித்துறை யிரட்டைப் பாடலே.
 
     (இ-ள்.) மணிமாலை யாமாறுணர்த்துதும். எப்பொருண் மேலும் வெண்பா
விருபதும், கலித்துறை நாற்பதுங் கலந்து வருவது மணிமாலை யெனப்படும். எ-று. (29)
 
280. பன்மணி மாலை பன்னிற் கலம்பகத்
தொருபோ கம்மானை யூச லிவைநீத்
தகவல் வெள்ளை யருங்கலித் துறையென்
றவைசெறி நூறந் தாதியாய் வருமே.
 
     (இ-ள்.) பன்மணிமாலை யாமாறுணர்த்துதும். மேலே காட்டியகலம் பகத்தின்
முகத்து வரு மொருபோகு மம்மானையு மூசலு மென்றிம்மூன் றொழித் தொழிந்த
கலம்பக வுறுப்புடைத்தாகி வெண்பா வகவல் கலித்துறை யென்றிம்மூவகைப் பாட்டா
னூறாகவு மந்தாதி யாகவு முடிந்த செய்யுள் பன்மணிமாலை யெனப்படும். எ-று. (30)