276. | ஊச லென்ப வூசலாய்க் கிளையள வாசிரிய விருத்த மாகப் பாடலுந் தன்னொலி வருங்கலித் தாழிசைப் பாடலும் வண்ணக முதற்கண் வரினு மியல்பே. | |
(இ-ள்.) ஊச லாமாறுணர்த்துதும். ஊசலைப் பாடிப் பாட்டுடைத் தலைமகனது சுற்றத்தாரளவாக வாசிரிய விருத்த மாயினுங் கலித்தாழிசை யாயினும் பாடுவ தூச லெனப்படும். அவற்றின் முதற்கண் வண்ணக மொன்று வரினு மியலு மென்றுணர்க. வண்ணக மெனினு மராக மெனினு முடுகிய லெனினு மொக்கும். எ-று. (26) |
277. | கோவையே யகப்பொருட் கூறுபா டிசைப்பட நாவலர் கலித்துறை நானூறுரைத்தலே. | |
(இ-ள்.) கோவை யாமாறுணர்த்துதும். பொருளதிகாரத்தின் கண்ணே காட்டிய தன்மையிற் களவு, கற்பென விருபா லுடைய வகப்பொருட்டிணைக ளேழும் விளக்கிக் கலித்துறை நானூறாகப் பாடித் தொடுத்த செய்யுள் கோவை யெனப்படும். எ-று. (27) |
278. | இரட்டை மாலையா மிணைந்த பப்பத்தாய் வெண்பா கலித்துறை விரவிப் பாடலே. | |
(இ-ள்.) இரட்டை மாலை யாமாறுணர்த்துதும். எப்பொருண்மேலு முறையே கலந்த பத்து வெண்பாவும், பத்துக் கலித்துறையும் வருவ திர ட்டைமாலை யெனப் படும். எ-று. (28) |
279. | மணிமாலை வெண்பா வகைநா லைந்துட னிணையாய்க் கலித்துறை யிரட்டைப் பாடலே. | |
(இ-ள்.) மணிமாலை யாமாறுணர்த்துதும். எப்பொருண் மேலும் வெண்பா விருபதும், கலித்துறை நாற்பதுங் கலந்து வருவது மணிமாலை யெனப்படும். எ-று. (29) |
280. | பன்மணி மாலை பன்னிற் கலம்பகத் தொருபோ கம்மானை யூச லிவைநீத் தகவல் வெள்ளை யருங்கலித் துறையென் றவைசெறி நூறந் தாதியாய் வருமே. | |
(இ-ள்.) பன்மணிமாலை யாமாறுணர்த்துதும். மேலே காட்டியகலம் பகத்தின் முகத்து வரு மொருபோகு மம்மானையு மூசலு மென்றிம்மூன் றொழித் தொழிந்த கலம்பக வுறுப்புடைத்தாகி வெண்பா வகவல் கலித்துறை யென்றிம்மூவகைப் பாட்டா னூறாகவு மந்தாதி யாகவு முடிந்த செய்யுள் பன்மணிமாலை யெனப்படும். எ-று. (30) |