207செய்யுண்மரபியல்
     அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவனெழுந்துவித்தல், அதைப்
பண்ணைத் தலைவர்க் கறிவித்தல், நாற்று நடல், விளைந்தபிற்செப்பஞ் செயல்,
நெல்லளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுளொருவர்க் கொருவ ரேசலன
விவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங் காங்கு தோன்றச் சிந்தும் -
விருத்தமும் - விரவிவர விவற்றாற் பாடுவது.
 
     கடிகை வெண்பா:- தேவரிடத்து மரசரிடத்து நிகழுங் காரியம் கடிகை யளவிற்
றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசைவெண்பா வாற் கூறுவது.
 
     முதுகாஞ்சி:- இளமை கழிந்தறிவு மிக்கோ ரிளைமை கழியாத வறிவின் மாக்கட்குக்
கூறுவதாம்.
 
     இயன்மொழி வாழ்த்து:- இக்குடிப் பிறந்தோர்க் கெல்லா மிக்குணமியல் பென்று
மவற்றை நீயு மியல்பாக வுடையையென்று மின்னோர்போல நீயுமியல்பாக வீயென்று
முயர்ந்தோ ரவனை வாழ்த்துவதாகக் கூறுவது.
 
     பெருமங்கலம்:- நாடோறுந் தான் மேற்கொள்கின்ற சிறை செய் தன் முதலிய
செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதன் முதலிய சிறந்த தொழில்கள் பிறத்தற்குக்
காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணி யைக் கூறுவது. எ-று. (33)
 
284. முதன்மொழிப் பொருத்தந் தந்திடுங் காலை
மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம் பாலுணாக்
கங்கில் வருணநாட் கதிகண மீரைந்தே.
 
     (இ-ள்.) செய்யுட் கெல்லாம் பொதுவாய்ச் சில விலக்கணங்களை யுணர்த்தத்
தொடங்கினோம். செய்யுட் கெல்லா முதன் மொழியிடத்துப் பலவகைப் பொருத்தம்
வேண்டுவதாக விதித்தார் முன்னோர். அவையே மங்கலம், சொல், எழுத்து, தானம்,
பால், உணா, வருணம், நாள், கதி, கணம், எனப் பத்து வகைப் படும். இவற்றைத்
தனித்தனி விளக்குதும். பொருத்தவியல். - "பகர்செய்யுண் மங்கலஞ் சொல்லெழுத்துத்
தானம் பாலுண்டி வருணநாட் கதியே யென்றாப், புகரில் கணமெனப் பத்தும் பிறங்கு
கேள்விப் புலவர் புகழ்முன் மொழிக்குப் புகல்வர் செம்பொற், சிகர கிரியெனப்
பணைத்துப் புடைத்து விம்மித் திரண்டெழுந்து வளர்ந்திளகிச் செறிந்த கொங்கைத், தகர
மலர்க்குழற் கருங்கட் குமுதச் செவ்வாய்ச் சரிவளைக் கைக்கொடி யன்னத் தயங்கு
மாதே." இதுமேற்கோள். எ-று. (34)
 
285. மங்கலப் பொருத்தமே கங்கை மலைநிலங்
கார்புயல் பொன்மணி கடல்சொல் கரிபரி
சீர்புக ழெழுத்தலர் திங்க டினகரன்
றேர்வய லமுதந் திருவுல காரண
நீர்பிற வருமுத னிலைச்சொல் லியல்பே.