208தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) மங்கலச் சொற்பொருத்தமாமாறுணர்த்துதும். மங்கலப் பொருத்தம்:-
கங்கை, மலை, நிலம், கார், புயல், பொன், மணி, கடல், சொல், கரி, பரி, சீர், புகழ்,
எழுத்து, அலர், திங்கள், தினகரன், தேர், வயல், அமிழ்தம், திரு, உலகு, ஆரணம், நீர்,
என்று சொல்லப் பட்ட விருபத்தினாற்சொல்லு மித்தொடக்கத்தன பிறவு மங்கலச்சொல்,
எ-ம். செய்யுண் முதற்சொல், எ-ம். பெறும். பிறவென்ற மிகையாற் சொன்ன வற்றின்
பயனுள மற்றைத் திரிசொல் லெல்லா மேற்கு மென்றுணர்க. காரென்பதற்கு:-முகில்,
மழை, குயின், செல், கனம், மஞ்சு, எனினு மொக்கும். இவ்வகைச் சொல்லி னொன்றே
முதற் சொல்லாக விணையா தாயின் மங்கலச் சொல்வழு வெனப்படும். அங்ஙனங்
கம்பர் "உலகம் யாவையுந் தாமுள வாக்கலு" மென்றார். திருவள்ளுவர் 'அகர முதல
வெழுத் தெல்லா' மென்றார். பிறவுமன்ன. ஆயினு மச்சொற்றாமே முதல் வாராமையு
மவற்றவற் றடுக்கிய பலவடைமொழியே வரினு மேற்கு மென்றுணர்க. நன்னூலி
லுலகமுதல் வாராமல் 'மலர்தலை யுலக' மென்ற தாகவும், சிந்தாமணியின் 'மூவா முதலா
வுலக மொரு மூன்று' மென்றதாகவும், நைடதத் துண் மழை முதல் வாராமற் 'கருவி
மாமழை' யென்றதாகவும், காரிகையின் மலர்முதல் வாராமற் 'கந்தமடிவிற் கடிமல' ரென்ற
தாகவுங் கண்டு முதற் சொல்லாக மங்கலச்சொற் கடைமொழியே வந்தவாறு காண்க. -
பொருத்த வியல். - "மாமணி தேர்புக ழமுத மெழுத்துக் கங்கை மதிபரிதி களிறு பரி
யுலகஞ் சீர்நாட்,பூமலை கார்திருக் கடனீர் பழனம் பார்சொற் பொன்றிகிரி பிறவு
முதன்மொழிச் சீர்க்காகு, நாம வகையுளி சேர்தல் பொருளதின்மை நலமிலதாய் வைத்தல்
பலபொருளாய்த் தோன்ற, லாமினிய சொல்லீறு திரிதல்போலு மாதி மொழிக் காகாவா
நந்த மாமே." இது மேற்கோள். எ-று, (35)
 
286. சொல்லின் பொருத்தஞ் சொல்லுங் காலை
யரிதுணர் சொல்லு மருந்திரி சொல்லுந்
திரிபுடைச் சீருந் தீதா முதற்கே.
 
     (இ-ள்.) சொற்பொருத்தமாமாறுணர்த்துதும். செய்யுண் முதற்கண் மங்கலச்
சொல்லே வரினுங் கற்றோராலு மெளிதிற் புலப்படாச் சொல்லு மையமாகப் பலபொருள்
குறித்த வரி பயன்றிரி சொல்லு முதற்சீ ரீற்றெழுத்தே சந்திவகையாற் றிரிந்த
சொல்லுமுடையசீரு முதற்கண்வரின் வழுவா மெனக் கொள்க. ஆகையிற் 'கடற வழுலக'
மெனினும், 'தேருரு டிரிதரு' மெனினு மீற்றுத் திரிபினா லாகா. 'சீரரி மருவுந் திருநிழற்
சோலை' யெனிலரி யென்பது சிங்கமோ, வண்டோ, பன்றியோ, யாதோ வென்று
தோன்று மையத் தாலாகா. - பாட்டியல். - வெண்பா. "வகையுளி சேர்தல் வனப்பின்
றாயநிற்ற, றொகையார் பொருள் பலவாய்த் தோன்ற, றகைவில், பொரு ளின்மையீறு
திரிதலே போல்வ, தருமுதற் சீர்ச் சொற்காகுந் தப்பு." இது மேற்கோள். பிறவுமன்ன.
எ-று. (36)