209செய்யுண்மரபியல்
287. எழுத்தின் பொருத்தமே யெழுவாய்ச் சீர்க்கண்மூன்
றைந்தே ழொன்பது வியநிலை நன்றா
மிரண்டுநான் காறெட்டுச் சமநிலை வழுவாம்.
 
     (இ-ள்.) எழுத்தின் பொருத்த மாமாறுணர்த்துதும். முதற்சீராக வொற்று முயிரு
முயிர்மெய்யு மொற்றைப்பட மூன்று மைந்து மேழுமாக வரி னதுவியநிலையாகி
நல்லதென்ப. இரண்டு நான்கு மாறு மெட்டு மாக வரி னது சமநிலையாகி வழுவா
மென்ப. ஆயினுஞ் சிந்தாமணியின் மூவா வென்றிரண் டெழுத்து வந்தவாறுகாண்க.
ஒற்றுமுட்படக்கொண்ட காரணம் யாதோ வெனின் முதற்கண் மூவசை மிக்கனசீர் வாரா
வென்றமை யானு மூவசைச்சீரு மொற்றொழித் தொன்பதெழுத்தாக வாராவென்றமை
யானு மொற்று முட்படக்கொண்டவாறுகாண்க. - பாட்டியல். - "தப்பாத மூன்றைந்
தேழொன்பான் றவறில்வென், றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்காற்,
றண்டாத நாலாறெட் டாகா தவிர்கென்று, கொண்டா ரெழுத்தின் குறி." இது மேற்கோள்.
எ-று. (37)
 
288. தானமே,
குறினெடி றம்முனி னைந்துஇ உவ்வுடன்
ஐ ஒளவுஞ் சேர்புழி யைந்தா மவற்றுட்
டலைமக னியற்பெயர் தான முதலாப்
பாலன் குமர னிராசன் மூப்பு
மரண முறையெண்ணி வருமுத லெழுத்தின்
றானமீற் றிரண்டெனிற் றவிர்க வென்ப.
 
     (இ-ள்.) தானப் பொருத்த மாமாறுணர்த்துதும். குற்றெழுத் தைந் தையு மவற்றவற்
றொத்த நெடிலையுங் கூட்டி இவ்வருந் தானத்தில் ஐயும் உவ்வருந் தானத்தில் ஒளவுஞ்
சேர்த்தால், ஐந்தானமாகும். அவையே அ - ஆவும், இ-ஈ-ஐயும், உ-ஊ-ஒளவும்,
எ-ஏயும், ஒ-ஓவு மென் றிவை யுயிராக வரினு முயிர் மெய்யாக வரினு மெழித்தின்றான
மைந்தெனக் காண்க. இவற்றைக் கொள்ளுமாறு பாட்டு நாயக னியற்பெயர்
முதலெழுத்தின் றான முதற்கொண் டெண்ணி, முறையே யைந்து தானங்களுக்குப்
பாலன், குமரன், இராசன், மூப்பு, மரண, மெனு மைம்பெய ரிட்டு, மங்கலச் சொன்
முதலெழுத்து மூப்பெனுந் தானத்திலு, மரணமெனுந் தானத்திலும் வரின் தகா தென்று
தவிர்தல் வேண்டு மென்மனார் புலவர். அங்ஙன மிராமாயண நாயக னிராம னாகையில்
இ-வருந் தானம் பாலதானமாகக் கொண்டு கம்ப ரெடுத்த மங்கலச் சொல்லெனு
முலகத்தின் முதலெழுத்துக் குமரதான மாயிற்றெனக் கொள்க. - தேம்பாவணி. - நாயகன்
வள னாகையில் அ-வருந் தானம் பால தானமாகிச் சீரிய வெனு முதற் சொற் பார்க்கிற்
குமரதான மாகவும், உலக மெனு மங்கலச் சொற் பார்க்கி லிராச தானமாகவும்