21மூன்றாவதெழுத்தின்விகாரம்
அகரம் ஐகாரமாகத் திரிந்தது. இவையே மொழிமுதற்போலி, மொழியிடைப்போலி, எ-ம்.
கூறுவர். அன்றியும், ஐந்நூறு, ஐஞ்ஞூறு; மைந்நின்றகண், மைஞ்ஞின்றகண்; நெய்ந்நின்ற
விளக்கு, நெய்ஞ்ஞின்றவிளக்கு; எ-ம். வரும். மொழிக்கடைப்போலி. (உ-ம்.) நலம், நலன்;
குலம், குலன்; குளம், குளன்; பழம், பழன்; பயம், பயன்; கடம், கடன்; அகம், அகன்;
மனம், மனன், எ-ம். சுரும்பு, சுரும்பர்; கொம்பு, கொம்பர்; வண்டு, வண்டர்; மாது,
மாதர்; சாம்பல், சாம்பர்; பந்தல், பந்தர்; அனந்தல், அனந்தர்; குடல், குடர்; அரும்பு,
அரும்பர்; எ-ம். வரும். நன்னூல். - "அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்." எ-து.
மேற்கோள். எ-று. (7)
 
28. அடைமொழிஉக்குறள் ஐயாதலுமாம்.
 
     (இ-ள்.) குற்றியலுகர விகாரமாமாறுணர்த்துதும். குற்றிய லுகரவீற்றுச்சிலபதம்
அடைமொழியாய் நின்று தொகைப்பொருளாக மற்றொரு பதத்தோடும் பகுபதமாக
விகுதியுருபோடும் புணருங்காலை உகரந்திரிந்து ஐயாகவும் பெறும். (உ-ம்.) ஆண்டு,
ஆண்டை; ஈண்டு, ஈண்டை; யாண்டு, யாண்டை; மற்று, மற்றை; இன்று, இற்றை;
அன்றுவாக்கியம், அற்றைவாக்கியம்; பண்டுசெய்தி, பண்டைச்செய்தி; இன்றுநாள்,
இற்றைநாள்; நேற்றுகூலி, நேற்றைக்கூலி; மூவாண்டுநெல், மூவாட்டைநெல், எ-ம்.
பிறவுமன்ன. தொகைப்பொருளாக உகரந்திரிந்தவாறு காண்க. ஈராட்டையான்,
பண்டையான், மற்றையவர், என பகுபதமாக உகரந்திரிந்தவாறு காண்க. அன்றியும்,
அளவடியான்வரும் கலிவிருத்தமட்டைவிருத்த மென்பார் இன்றைப் புலவருட்சிலர். -
நன்னூல். "ஐயீற்றுடைக்குற் றுகர முமுளவே." எ-து. மேற்கோள். எ-று. (8)
 
29. தெவ்வென்பதிருவழி உவ்வெய்திச்சேரும்
வலிமிகுமவ்வரின் வவ்வுமவ்வாமென்ப.
 
     (இ-ள்.) இனிச் சிலசிறப்பு விதிகளை யுணர்த்துதும். தெவ் என்னுமொழி
வல்லினத்தோடுபுணரின் உகரமெய்தி வல்லினமிகுதலும், மகரத்தோடு புணரின்
வகரங்கெட்டு மகரமிகுதலுமாம். (உ-ம்.) தெவ் + கடிது = தெவ்வுக்கடிது, தெவ் + கடுமை
= தெவ்வுக்கடுமை, எ-ம். தெவ் + மன்னர் = தெம்மன்னர், தெவ் + முனை =
தெம்முனை, எ-ம். வரும். தெவ், எ-து. பகை - நன்னூல். "தெவ்வென்மொழியே
தொழிற்பெயரற்றே, மவ்வரின்வஃ கான் மவ்வுமாகும்." எ-து. மேற்கோள். எ-று. (9)
 
30. யரழமுன்வலிவரினல்வழிக்கியல்பு
மடைமொழிக்காக்கமு மவைவேற்றுமைக்கண்
மிகலுந்தன்னின மெலியெய்தலுமாம்.